திகைத்து நிற்கிறது போலீஸ்! காரணம், ஏ.டி.எம். கார்டு மோசடிகள்! இது தொடர்பாக, தினமும் சென்னை போலீஸிற்கு 20 புகார்களாவது வந்து கொண்டிருக்கின்றன. இதுவரை இல்லாத அளவுக்கு ஏ.டி.எம். எத்தர்கள் சூப்பர் மார்க்கெட்டுகள், ஜவுளிக் கடை, நகைக்கடை,ஹோட்டல்கள், பெட்ரோல் பங்க்குகள் என்று நீக்கமற நிறைந்து,அங்கு பணிபுரியும் ஆட்களின் உதவியுடன் ஏ.டி.எம். கார்டுகளின் தகவல்களைத் திருடி, போலி கார்டு தயாரித்தும், ஆன்லைன் மூலமாகவும் பணத்தைக் கையாடிக் கொண்டிருக்கிறார்கள்.இதுவரை மூன்று கோடி ரூபாய்க்குமேல் பணம் திருடப்பட்டுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இரண்டு அப்பாவிகளின் சோகக் கதைகளைப் பார்ப்போம்... ஜி.சிவக்குமார் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர். பூந்தமல்லியில் இருந்த ஒரு ஏ.டி.எம். சென்டருக்கு பணம் எடுக்கப் போனார். மிஷினில் கார்டை சொருகி, பின் நம்பரை டைப் செய்த நேரத்தில் அவருக்கு ஒரு செல்போன் அழைப்பு வந்தது. அழைப்பு தந்த சுவாரஸ்யத்தில் பேசிக்கொண்டே வெளியே வந்துவிட்டார். பேச்சு முடிந்தவுடன் திரும்ப மிஷின் அருகில் வந்தவர், தன்னுடைய டெபிட் கார்டு, மிஷினில் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியுற்றார். சில நிமிடங்கள் கழித்து அவருடைய மொபைல் போனுக்கு ஒரு எஸ்.எம்.எஸ். வந்தது, அதாவது அவரது கார்டில் இருந்து 29,000 ரூபாய் பணம் எடுக்கப்பட்டதாக. ஏ.டி.எம். சென்டரில் இவரைக் கவனித்துக் கொண்டிருந்த திருடன் எவனோ, இவரது செல்போன் அழைப்பை பயன்படுத்திக் கொண்டு பணத்தை ஆட்டை போட்டிருக்கிறான். பிற்பாடு அந்தத் திருடன் ஒரு நகைக்கடையில் இந்த டெபிட் கார்டைப் பயன்படுத்தியபோது கையும், கார்டுமாக மாட்டினான். சந்தோஷ் தனக்கு வந்த மின்னஞ்சல்களை வாசித்துக் கொண்டிருந்தார். ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் அவருக்கு கணக்கு இருந்தது. அந்த வங்கியில் இருந்து வந்ததைப்போல ஒரு போலி மின்னஞ்சலைக் கண்டார். அது போலி என்று அறியாமல், ‘க்ளிக்’ செய்துவிட, ஒரு போலி வெப்சைட் புதியதாகத் திறந்தது. ‘உங்களுடைய புதிய தகவல்கள் தேவை’ என்று அந்த வெப்சைட் கோரியதால், வங்கிக் கணக்கு எண், பின் நம்பர் ஆகியவற்றைச் செலுத்தி வெப்சைட்டுக்குள் நுழைந்து, அந்தத் தளம் கேட்ட சில தகவல்களைக் கொடுத்தார். மேலும் சில நிமிடங்களில் அவரது வங்கிக் கையிலிருப்பிலிருந்த பணம் 5,05,000 மொத்தம் ஆறு பரிவர்த்தனைகளில் வேறு வேறு அக்கவுண்டுக்கு உடனடியாக மாற்றப்பட்டு விட்டது. இப்படி பல்வேறு விஷயங்களில் ஏமாந்தவர்களும் பல்வேறு மோசடிச் சம்பவங்களும் ஏராளம்... இந்த ஏ.டி.எம். எத்தர்கள் எப்படிச் செயல்படுகிறார்கள்? அவற்றைப் பார்ப்பதற்குமுன் வேறு சில அடிப்படைத் தகவல்களைப் பார்த்துவிடுவோம். கம்ப்யூட்டர் தொடர்பான தொழில்களுக்கு பெயர்போன ஐ.பி.எம். நிறுவனம், கடந்த நூற்றாண்டில் மனிதகுலத்துக்குப் பரிசளித்த அருமையான தொழில்நுட்பம் ஏ.டி.எம். சுருக்கமாக அழைக்கப்படும்Automated Teller Machine. இந்த ஏ.டி.எம். தொழில்நுட்பம் பலவகைகளில் நம் வாழ்க்கையை சுலபமாக்குகிறது. வங்கிக்குச் சென்று, படிவம் எழுதி, வரிசையில் நின்று, டோக்கன் வாங்கி, பணம் வாங்கும் வேலையெல்லாம் இன்று இல்லவே இல்லை. நேர விரயம் இல்லை. பணம் எடுக்க வங்கி பாஸ்புக் கூடத் தேவையில்லை. இப்போதெல்லாம் வங்கிகளில் வழங்கப்படும் கார்டுகள் வெறும் பணம் எடுக்கும் அட்டைகளாக மட்டுமின்றி, டெபிட் கார்டு எனப்படும் பணம் இருப்பு அட்டைகளாகவும் செயல்படுகின்றன. பணம் எடுக்க மட்டுமல்லாமல், மளிகைப்பொருட்கள் கூட வாங்கலாம். பெட்ரோல் போடலாம். ஹோட்டலில் சாப்பிடலாம். பர்ஸ் புடைக்க பணத்தை சுமந்து செல்லத் தேவையில்லை. ரிஸ்க் குறைவு. பயன் அதிகம். எனவேதான் பெரும்பாலான நிறுவனங்கள், இப்போது தம் ஊழியர்களுக்கு சம்பளத்தைப் பணமாகத் தருவதில்லை. வங்கிக் கணக்குகளில் டெபாசிட்செய்துவிடுகிறார்கள். உங்கள் பணத்தை நீங்கள் கையில் கூட தொட்டுப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. எல்லா பணப் பரிவர்த்தனைகளையும் உள்ளங்கைக்குள் அடங்கும் அட்டை மூலமாகவே செய்துகொள்ளலாம். இணையம் மூலமாக வீட்டுக்குள் இருந்தே ஏ.டி.எம். அட்டையைக் கொண்டு எதையும் வாங்கி விட முடியும் என்கிற அளவுக்கு நிலைமை முன்னேறியிருக்கிறது. எல்லாம் சரி, நல்ல விஷயம்தான். ஆனால், தொழில்நுட்பம் எவ்வளவுதான் பாதுகாப்பானதாக இருந்தாலும், அதை உடைப்பதுதானே திருடர்களின் வேலை? சமீபகாலமாக திருடர்கள் திருடுவது பணத்தையல்ல,ஏ.டி.எம். கார்டை அல்லது கார்டுக்குள் அடங்கியிருக்கும் தகவல்களை. முன்பு மாதிரி வரி வரி பனியன் போட்ட, கன்னத்தில் மரு ஒட்டிய பிக்பாக்கெட் காரர்கள் இப்போது இல்லை. மாறாக ஜீன்ஸும், டீஷர்ட்டும் அணிந்த டீசண்டான திருடர்கள் பெருகிவிட்டார்கள். அரை பிளேடை எடுத்துக்கொண்டு நெரிசலான பஸ்களில் ஏறி, இவர்கள் தொழில் செய்வதில்லை. சொல்லப்போனால் இருக்கும் அறையைக் கூட விட்டு வெளியேறாமல், உங்கள் பாக்கெட்டில் இருக்கும் பணத்தை (அதாவது வங்கிக் கையிருப்பை)‘லூட்’ அடிக்கிறார்கள். என்னதான் நடக்கிறது இங்கே? ஏ.டி.எம். எப்படி இயங்குகிறது? ஏ.டி.எம். அட்டைகள் பிளாஸ்டிக்கில் உருவாக்கப் படுகின்றன. இவற்றின் பின்புறம் கறுப்பு நிறத்தில் ஒரு காந்தப்பட்டை ஒட்டப்பட்டிருக்கும். அந்தப் பட்டையில்தான் வங்கிக் கணக்கு மொத்தமும் அடங்கியிருக்கிறது. ஓர் அட்டையில் அச்சிடப்பட்டிருக்கும் எண், உலகின் வேறு எந்த அட்டைக்கும் இருக்கவே இருக்காது (Unique No). காந்தப் பட்டையில் சேகரிக்கப்பட்டிருக்கும் தகவல்களை, ஏ.டி.எம். இயந்திரத்தில் இணைக்கப் பட்டிருக்கும் கார்டு ரீடரால் படித்தறிய முடியும். அதன் மூலமாகவே இருப்பில் இருக்கும் தொகை, எவ்வளவு பணத்தைக் கொடுக்க முடியும் போன்ற தகவல்களை, மனித உழைப்பு கோராமல் அதுவாகவே முடிவு செய்துகொள்ளமுடிகிறது. ஏ.டி.எம். இயந்திரங்கள் டெலிபோன் தொடர்பினைக் கொண்டு, மோடம் மூலமாக ஏ.டி.எம். கண்ட்ரோலருடன் இணைக்கப்பட்டிருக்கும். இதனுடைய தொடர்புத் தொழில்நுட்பம் கிட்டத்தட்ட நம்முடைய இணையத் தொடர்பு மாதிரிதான். ஏ.டி.எம்கள், வங்கிகளுக்கு இடையேயான பிரத்யேக நெட்வொர்க்கில் இணைந்திருக்கும் என்பதால், தகவல்கள் உடனுக்குடன் துல்லியம் பெறுகிறது. செயற்கைக்கோள் தொழில்நுட்பம் எல்லாவற்றையும் சாத்தியம் ஆக்குகிறது. இது மிகவும் நல்ல தொழில்நுட்பம்தான். ஆனால், அதற்கு நேரெதிரான ‘கெட்ட’ தொழில்நுட்பமும் வளரும் என்பதுதானே யதார்த்தம். இனி ஏ.டி.எம். எத்தர்களின் ‘லீலை’களைப் பார்க்கலாம்... எத்தர்களில் இத்தனை வகைகளா? ஏ.டி.எம். இயந்திரத்தையே உடைத்து, பணத்தைக் கொள்ளையடிப்பது ஒரு வகை. இது கிட்டத்தட்ட பேங்க் லாக்கரைக் கொள்ளையடிப்பதற்குச் சமமானது. இது பாரம்பரியமான திருட்டு முறை. ஒவ்வொரு ஏ.டி.எம். சென்டரிலும் ரகசிய கேமிரா வசதி உண்டு. அது மட்டுமின்றி,ஏ.டி.எம். கொள்ளையடிக்கப்படும் போது, அருகிலிருக்கும் காவல் நிலையத்திலும் அலாரம் அடிக்கும். மேலும் ஒவ்வொரு சென்டருக்கும் வங்கிகளில் இருப்பதைப் போன்றே செக்யூரிட்டிகள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகளை எல்லாம் தகர்த்துக் கொள்ளையடிப்பது என்பது பெரும்பாலும் சாத்தியமாகாத விஷயம். ஆனாலும் துரதிருஷ்டவசமாக சில நேரங்களில் சாத்தியமாகியிருக்கிறது. கொள்ளை நடந்துகொண்டிருக்கும்போதே காவல்துறை ஏ.டி.எம். மிஷினும், கையுமாக கொள்ளைக்காரர்களைப் பிடித்த சம்பவங்களும் உண்டு. இந்த முறையில் ‘ரிஸ்க்’ அதிகம் என்பதால், ஏ.டி.எம். கார்டு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களைக் குறிவைத்துக் கொள்ளை அடிப்பது திருடர்களின் வழக்கமாக இருக்கிறது. ஏ.டி.எம். கேபின்களில் நீங்கள் அட்டையை நுழைத்து, பணமெடுக்க முற்படும்போது உங்கள் முதுகுக்குப் பின்னால் யாரோ நின்றுகொண்டு, உங்கள் ரகசிய பின் நம்பரை, நீங்கள் டைப் செய்யும்போதே பார்த்துத் தெரிந்துகொள்வார். இதற்குப் பெயர் Shoulder surfing பிற்பாடு உங்கள் கார்டை அவர் திருடிவிட்டால், பணத்தை ஆட்டை போடுவது வெகு சுலபம். நண்பராய் உங்களோடு அறிமுகமாகி, பேசிப்பழகி ஏ.டி.எம். பாஸ்வேர்டை அறிந்துகொள்வது இன்னொரு முறை. Social engineering என்று இந்தத் திருட்டு முறையை சொல்கிறார்கள். இந்த இரண்டு முறையிலுமே உங்கள் அஜாக்கிரதை அல்லது அப்பாவித்தனத்தால் நீங்களே திருடனுக்கு சிகப்புக் கம்பளம் விரிக்கிறீர்கள். இந்த இருமுறைகளை தவிர்த்துப் பார்த்தால், உடல்ரீதியான தாக்குதலை ஏ.டி.எம். கார்டு உரிமையாளர் மீது, ஒரு திருடன் பிரயோகிப்பது என்பது மற்றுமொரு முறை. குறிப்பாக நள்ளிரவு நேரங்களில் ஏ.டி.எம். சென்டருக்குச் செல்லும் வழக்கம் கொண்டவர்களுக்கு இந்த ஆபத்து அதிகம். வழக்கமான வழிப்பறி மாதிரியே இதுவும் நடக்கும். கத்தியைக் காட்டியோ அல்லது வேறுமுறையில் அச்சுறுத்தியோ ஏ.டி.எம். கார்டைப் பிடுங்கி, உரிமையாளரின் வாயிலேயே ரகசிய பாஸ்வேர்டு நம்பரையும் பெற்றுக் கொள்ளை அடிக்கும் முறை இது. இதெல்லாம் உடல் வலிமையும் சராசரி அறிவும் கொண்ட திருடர்கள் செய்யும் வேலை. அல்ட்ரா மாடர்ன் திருடர்கள் தினுசு தினுசான வேறு வேறு முறைகளில் டெக்னிக்கலாக நம்மை அலறவைக்கிறார்கள். Lebanese Loop என்றொரு திருட்டுமுறை இருக்கிறது. ஏ.டி.எம்மில் நீங்கள் கார்டை சொருகும் இடத்தில், ஒரு கருவியைப் பொருத்திவிடுவார்கள். அப்பாவியான நீங்களோ கார்டை சொருகி,ரகசிய பின் நம்பரை அழுத்தி, பணம் பெற வேண்டிய ஆணைகளைக் கொடுத்துக் கொண்டிருப்பீர்கள். பணமும் வராது, நீங்கள் சொருகிய கார்டும் மிஷினிலிருந்து திரும்ப வராது. உடனடியாக நீங்கள் பதட்டம் அடைவீர்கள். அங்கேயே நோட்டம் விட்டுக் கொண்டிருந்த திருடன், உடனே உங்களுக்கு உதவ(?) நல்லவன்போல பாய்ந்து வருவான். ‘இன்னொரு முறை பின் நம்பரை டைப் பண்ணுங்க சார்’ என்பான். நீங்களும் விஷயம் தெரியாமல், அவன் எதிரிலேயே ‘டைப்’ செய்வீர்கள். அப்படியும் பிரச்சினை தீராது. மிஷினில் ஏதோ பிரச்சினை என்று, வங்கியில் புகார் செய்துகொள்ளலாம் என்று கிளம்ப முடிவெடுப்பீர்கள். நீங்கள் கிளம்பிய பிறகு, ஏ.டி.எம்மில் பொருத்தப்பட்ட அந்தத் திருட்டுக் கருவியை எடுத்துவிட்டு, உங்கள் அட்டையிலிருக்கும் பணம் மொத்தத்தையும் அந்த நல்லவன், ஆட்டையைப் போட்டுவிடுவான். உங்கள் பின் நம்பரை அவன் எதிரில் நீங்கள் டைப் செய்தபோது, அவன் மனதுக்குள் மனப்பாடம் செய்துவிட்டிருப்பான். Card Skimming அடுத்த வகை. ஏ.டி.எம். மிஷினில் ஒரு போலியான மிஷின் ஒன்றினை உருவாக்கிப் பொருத்தியிருப்பார்கள். நீங்கள் பாட்டுக்கு உங்கள் கார்டை சொருகியதுமே உங்கள் வங்கி அக்கவுண்ட் நம்பர், கையிருப்பு, பின் எண் என மொத்த ஜாதகத்தையும் அந்தப் போலிக் கருவி உருவி, நினைவில் வைத்துக் கொள்ளும். இந்தத் தகவல்களைக்கொண்டு இணையம் மூலமாக உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எடுக்க முடியும், அல்லது அதே தகவல்களை வைத்து அச்சு அசலாக உங்கள் கார்டு மாதிரியே டூப்ளிகேட் கார்டு உருவாக்கிவிடவும் முடியும். அதாவது, உங்கள் கார்டுக்குப் பின்னாலிக்கும் காந்தப் பட்டையைப்@பால போலியாகச் செய்தால் போதுமானது. Phishing எனப்படும் முறைதான் பிரபலமானதும், இன்றைய தேதியில் பரவலானதும் ஆகும். இது இணையம் மூலமாக உட்கார்ந்த இடத்திலிருந்தே தகவல்களைத் திருடுவது ஆகும். உதாரணத்துக்கு, உங்கள் வங்கியிலிருந்து உங்களுக்கு இ-மெயில் வரும். நீங்களும் வங்கியில் இருந்துதானே கேட்கிறார்கள் என்று விஷயம் தெரியாமல் அந்த இ-மெயில் கேட்கும் தகவல்களை யோசிக்காமலேயே கொடுத்து விடுவீர்கள். உண்மையில் அந்த இ-மெயில், உங்கள் வங்கியிடமிருந்து வந்திருக்காது. யாரோ ஒரு சைபர் திருடன் வங்கிக்குப் போலியான வெப்சைட்டை உருவாக்கி, அதன் மூலமாக உங்களுக்கு இ-மெயில் அனுப்பி, உங்கள் தகவல்களைத் திருடிவிடுவார். உங்கள் வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை மிகச் சுலபமாக எடுக்க, உங்களை சுலபமாக ஏமாற்ற இம்முறையே சிறந்ததாக இருக்கிறது. ‘ஆன்லைன் பேங்கிங்’ எனப்படும் இணையமுறையில் வங்கிப் பரிவர்த்தனைகளைச் செய்பவர்கள் மிக மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய தருணம் இது. பிரவுசிங் சென்டர்கள் போன்ற பொதுவான இடங்களில் வங்கிக் கணக்கைக் கையாளுவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். Key Logger எனப்படும் தொழில்நுட்பத்தைக் கொண்டு உங்கள் கார்டு எண், சி.வி.வி. எண் மற்றும் பாஸ்வேர்டு ஆகியவற்றை மிகச் சுலபமாக இங்கெல்லாம் திருட வாய்ப்பிருக்கிறது. பெட்ரோல் பங்க், சூப்பர் மார்க்கெட்டுகள் போன்ற இடங்களில் ஏ.டி.எம். கார்டைப் பயன்படுத்தும்போது கூடுதல் கவனம் தேவை. Decoder மிஷின்கள் மூலமாக உங்கள் அட்டையை டூப்ளிகேட் செய்யும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. எனவே, அட்டையை அதற்குரிய மிஷினில் சம்பந்தப்பட்ட அலுவலர் தேய்ப்பதை நீங்கள் பார்த்துக்கொண்டே இருப்பது நல்லது. சம்பந்தமில்லாத வேறு மிஷின்களில் தேய்க்க முயற்சித்தால், உடனடியாக ஆட்சேபணை தெரிவிக்க வேண்டும். சமீபத்தில் கொரியாவில் ஓர் அதிநவீனத் தொழில்நுட்பம் கண்டறியப்பட்டிருக்கிறது. ஏ.டி.எம். கார்டையோ, கிரெடிட் கார்டையோ ஒரு மிஷினில் தேய்க்க வேண்டிய அவசியமின்றி, ரிமோட் அடிப்படையில் - அதாவது அந்த மிஷினுக்கு அருகில் கொண்டுச் சென்றாலே போதும் - கார்டைத் தேய்க்கும் தொழில்நுட்பம் அது. உங்கள் அனுமதியின்றியே நீங்கள் அந்த மிஷினுக்கு அருகில் நிற்கும்போது உங்கள் அட்டையைத் தேய்த்துவிடலாம். தினுசு தினுசாக திருடர்கள் வருகிறார்கள். எந்தவொரு தொழில் நுட்பத்துக்கும், சவால் விடும் எதிர்த் தொழில்நுட்பத்தை உடனடியாக உருவாக்கி விடுகிறார்கள். இந்தப் பிரச்சினைகளிலிருந்து உங்கள் வங்கிக் கையிருப்பை பாதுகாத்துக் கொள்வது எப்படி?
இவையெல்லாம் பொதுவான பாதுகாப்பு வழிமுறைகள். ‘புதிய தலைமுறை’ உங்களுக்கு ஒரு பிரத்யேக ஆலோசனையைத் தர விரும்புகிறது. உங்களுக்குச் சம்பளம் போடப்படும் வங்கிக் கணக்கிற்கு மட்டுமே ஏ.டி.எம். அட்டை / ஆன்லைன் பேங்கிங் போன்ற வசதிகளைப் பயன்படுத்துங்கள். இந்த வங்கிக் கணக்கில்,பெட்ரோல் உள்ளிட்ட உங்கள் குறைந்தபட்சத் தேவைக்கான பணம் மட்டுமே மிச்சமிருப்பதாகப் பார்த்துக் கொள்ளுங்கள். ஒருவேளை கார்டு திருடப்பட்டாலோ, ஆன்லைனில் தகவல்கள் களவாடப்பட்டாலோ உங்களது இழப்பும் குறைவாகவே இருக்கும். ஒரு தேசிய வங்கியில் இன்னொரு கணக்கு வைத்துக் கொள்ளுங்கள். இந்தக் கணக்கிற்கு ஏ.டி.எம். அட்டை வேண்டாம். ஆன்லைன் பேங்கிங் வசதியும் வேண்டாம். மரபார்ந்த வங்கி நடைமுறைகளை மட்டுமே இந்தக் கணக்கிற்கு செயல்படுத்துங்கள். உங்களுக்கும், உங்கள் மனைவி, பெற்றோர் உள்ளிட்டோருக்கும் மட்டுமே தெரிந்த ரகசியக் கணக்காக இது இருக்கட்டும். உங்கள் சேமிப்பு இந்தக் கணக்கில் மட்டுமே இருக்கட்டும். உங்கள் ஏ.டி.எம்.கார்டு பயன்படுத்தும் கணக்கில் சேமிப்பு குறையும்போது, இதிலிருந்து எடுத்து, அதில் போட்டு அவ்வப்போது நிரப்பிக் கொள்ளுங்கள். ஒன்று மட்டும் உண்மை... திருடர்கள் பெரிய சாமர்த்தியசாலிகள் அல்லர். எல்லாம் தெரிந்த நம்மையேஏமாற்றிவிடும் அளவுக்கு ஏகாம்பரங்களும் அல்லர். நாம்தான் அஜாக்கிரதையாக ஏமாறுகிறோம். அவர்களுக்குத் தேவையான தகவல்களை எங்கோ, எப்படியோ கொடுக்கிறோம். இந்த உண்மையை உணர்ந்து, எப்போதும் எச்சரிக்கையுணர்வுடன் இருந்தால், எப்படிப்பட்ட கொம்பனாலும் நம்மை ஏய்த்துவிட முடியாது. காவல்துறைக்கு ஒத்துழையுங்கள்! ‘பிரைம் பாயிண்ட்’ சீனிவாசன், தலைவர், இந்திய சைபர் சொசைட்டி “சமீபகாலமாக ஏ.டி.எம். அட்டை தொடர்பான திருட்டுப் பிரச்சினைகள் மட்டுமின்றி, ஏராளமான சைபர் க்ரைம்களையும் நாங்கள் தொடர்ச்சியாக அவதானித்து வருகிறோம். மக்களிடையே இது தொடர்பான விழிப்புணர்வு குறைவானதாக இருப்பதால்தான் இதுபோன்ற பிரச்சினைகள் அதிகமாக வருகின்றன. கல்லூரிகள் மற்றும் அமைப்புகள் மூலமாக தொடர்ச்சியாக கருத்தரங்கங்கள் நடத்தி, விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சித்து வருகிறோம். காவல்துறையினருக்கும் பயிற்சியளிக்கிறோம். நம் காவல்துறையினர், இந்திய தண்டனைச் சட்டம் தொடர்பான விஷயங்களில் வல்லுநர்கள். சைபர் க்ரைம்கள் நம் நாட்டுக்குப் புதியது என்பதால், அது தொடர்பான நிறைய புகார்கள், தகவல்கள் அவர்களுக்கு கிடைத்தால்தான் மேற்கொண்டு அவர்கள் இத்துறையிலும் சிறப்பாகச் செயல்பட முடியும். ஏ.டி.எம். கார்டு திருடு போன்ற விஷயங்களை மக்கள் காவல்துறையிடம் கொண்டுசெல்லத் தயக்கம் காட்டுகிறார்கள். ஏனெனில் மற்ற குற்றங்கள் மாதிரியில்லாமல், குற்றவாளிகள் பெரும்பாலும் அவர்களது நண்பர்களாகவோ, உறவினர்களாகவோ, நெருங்கியவர்களாகவோ,தெரிந்தவர்களாகவோ இருந்துவிடுகிறார்கள். இதற்கெல்லாம் தயங்க வேண்டியதில்லை. உங்களுக்கு ஓர் இழப்பு தெரிந்தவர்களால் ஏற்பட்டாலும் கூட, அதை உடனடியாக ஈடு செய்யாவிட்டால் நஷ்டம் உங்களுக்குத்தான். நம் தமிழ் நாட்டுக் காவல்துறையின் சைபர் பிரிவு,இந்தியாவிலேயே சிறப்பாகச் செயல்படும் சைபர் பிரிவாக இருக்கிறது. எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் அவர்களிடம் கொண்டு செல்வதின் மூலமாகத்தான் உங்களால் தீர்த்துக்கொள்ள முடியும்.ஒரு ஏ.டி.எம். குற்றம் நடந்தது என்றால், உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கிக்குத் தெரியப்படுத்திவிட்டு அடுத்து, சைபர் போலீஸாருக்குத் தெரியப்படுத்துவதுதான் அறிவார்ந்த செயலும் கூட. ஏ.டி.எம்./கிரெடிட் கார்டு, இணையக் குற்றங்கள் என்று எதில் சந்தேகமிருந்தாலும், ஆலோசனை தேவைப்பட்டாலும் மக்கள் எங்களை மின்னஞ்சல் மூலமாக எப்போது வேண்டுமானாலும் தொடர்புகொள்ளலாம். எங்கள் மின்னஞ்சல் முகவரி : info@cysi.in” நூதனக் கொள்ளை! சமீபகாலமாக செய்தித்தாள்களில் பரபரப்பான விஷயம் இதுதான்... ஏ.டி.எம்./கிரெடிட் கார்டுகள் அதன் வாடிக்கையாளருக்கு கூரியர் மூலம் சென்று சேருவதற்கு முன்பாகவே, அதன் தகவல்கள் கூரியரில் வேலை பார்ப்பவர்கள் மூலமாக, ‘ஸ்கிம்மர்’ மிஷின் வைத்து திருடப்படுகிறது. இந்தத் தகவல்கள் வெளிநாடுகளில் இருக்கும் சைபர் திருடர்களுக்கு விற்கப்பட்டு, அவர்கள் மூலமாக, ‘ஆன்லைனில்’ லட்சக்கணக்கில் சுருட்டப்படுகின்றன. ‘கூரியர் பாய்ஸ்’ உள்ளிட்ட குற்றவாளிகள் பலரையும் போலீஸ் கைது செய்து, தீவிரமாக விசாரித்து வருகிறது. இந்த நவீன மோசடியிலிருந்து தப்ப, ஒரு வழிதான் இருக்கிறது. உங்களுடைய ஏ.டி.எம்./கிரெடிட் கார்டினை தபால் மற்றும் கூரியரில் பெறாதீர்கள். வங்கிக் கணக்கு துவக்கும்போதே,சம்பந்தப்பட்ட அலுவலரிடம் ‘கார்டினை நேராக வங்கிக்கு வந்து பெற்றுக் கொள்கிறேன்’ என்று சொல்லிவிடுங்கள். ஒருமுறை வங்கிக்குச் செல்வதற்கு சோம்பல் பட்டால், நம் கடின உழைப்பு மூலம் சேமித்த பணம் இதுபோல நாம் கண்ணால் கூடப் பார்த்திராத கொள்ளைக்காரர்கள் மூலம் கொள்ளைபோக வாய்ப்பிருக்கிறது. வங்கிகள் செய்யலாமே? பயோ-மெட்ரிக் முறை இப்போது பரவலாக பல இடங்களிலும் பயன்பாட்டுக்கு வந்து கொண்டிருக்கிறது. அட்டெண்டன்ஸ் கூட நம் விரல் ரேகை மூலம் பதியப்படும் முறை, பல அலுவலகங்களில் நடைமுறைக்கு வந்திருக்கிறது. ஏ.டி.எம். சென்டர்களில் பாஸ்வேர்டு முறைக்குப் பதிலாக வாடிக்கையாளரின் ‘விரல்ரேகையைப்’ பயன்படுத்தும் முறையைக் கொண்டுவந்தால், மேலும் பாதுகாப்பானதாக இருக்கும். ஏ.டி.எம். திருடர்களின் கொட்டத்தையும் ஓரளவு அடக்க முடியும். |
Tuesday, November 22, 2011
எச்சரிக்கை... ஏ. டி. எம். எத்தர்கள்! யார் இவர்கள்? முறியடிப்பது எப்படி? யுவகிருஷ்ணா
அண்ணா நூற்றாண்டு நூலகம்
சர்ச்சை
ஆ.பழனியப்பன்
ஐந்து நட்சத்திர ஓட்டல்கள், ஐ.டி. பார்க் - இவற்றைக் காட்டிலும் பிரமாண்டமும், வசீகரமும் கலந்து அண்ணாந்து பார்த்து பிரமிக்க வைக்கிறது சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம். சிலநாட்களுக்குமுன் ‘அண்ணா நூற்றாண்டு நூலகம், குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்படும்’ என்று தமிழக அரசு திடீரென அறிவித்ததில் இருந்து மக்களின் வருகை இந்நூலகத்திற்கு வழக்கத்தைக் காட்டிலும் அதிகரித்திருப்பதால் ஒரு பரபரப்பும் நிலவி வருகிறது.
நூலகத்திற்கு கடந்த ஞாயிறன்று ஒரு விசிட் அடித்தோம். விடுமுறை நாள் என்பதால், மக்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது. ஏராளமான கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களால் நிரம்பி வழிந்தது பார்க்கிங் பகுதி. கையொப்பமிட்டு நூலகத்திற்குள் நுழைவதற்காக நீண்ட வரிசையில் நின்றுகொண்டிருந்தனர் மக்கள். ‘சில்ட்ரன் ஹாஸ்பிட்டலாக இதை மாற்றப் போறாங்களாம். அதான், அதுக்குள்ளே பார்த்துட்டு போயிடலாம்னு வந்தோம்’ என்கிற முணுமுணுப்புகள் கேட்டுக் கொண்டேயிருந்தன.
உள்ளே நுழைந்ததும் நாம் கண்ட காட்சி திகைப்பையும் பெருமிதத்தையும் ஒருசேர ஏற்படுத்தியது...ஆம், வசதிபடைத்தவர்கள், நடுத்தரக்குடும்பத்தினர், குடிசைப்பகுதி மக்கள் என சமூகத்தின் அனைத்து தரப்பினரும் தங்களது பிள்ளைகளோடு வந்து, விருப்பமான புத்தகங்களை ஆர்வத்தோடு வாசித்ததைப்பார்க்கையில், நூலகத்தின் குளுமையைவிட அதிகமாகக் குளிர்ந்துபோனது நம் மனது.
ஏழு தளங்கள் கொண்ட இந்தக் கண்ணாடி மாளிகை, முற்றிலுமாக ஏ.சி. வசதி, கிரானைட் தரை, சொகுசு இருக்கைகள் என அசத்தலாக இருக்கிறது.
நூலகத்திற்குச் செல்வது, அங்குள்ள புத்தகங்களைப் படிப்பது என்பதுதான் வழக்கமானது. ஆனால், வீட்டில் இருந்து சொந்தப் புத்தகங்களை எடுத்துச் சென்று படிப்பதற்கென்றே தரைத்தளத்தில் தனிப்பகுதி உள்ளது. அப்பகுதி முழுவதும் இளைஞர்களால் நிரம்பி வழிகிறது. புத்தகங்களையும், மடிக்கணினிகளையும் கொண்டு வந்து படிப்பதிலும், குறிப்பெடுப்பதிலும் மும்முரமாக இருக்கின்றனர் இளைஞர்கள்.
குறிப்பாக அண்ணா பல்கலைக்கழகம், சென்னை ஐ.ஐ.டி. மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ், சி.எல்.ஆர்.ஐ. போன்ற பல உயர்கல்வி நிறுவனங்களுக்கு மத்தியில் இந்நூலகம் அமைந்துள்ளதால் இதன் முக்கியத்துவம் மேலும் அதிகரிக்கிறது. இங்கு பயிலும் ஏராளமான மாணவர்கள் இந்நூலகத்தைப் பயன்படுத்துவதைக் காண முடிந்தது.
குழந்தைகளுக்காகவே உருவாக்கப்பட்டுள்ள பகுதி, மழலைப் பட்டாளத்தால் திணறிக் கொண்டிருக்கிறது. அங்கு வரிசையாக அமைக்கப்பட்டுள்ள மேசைக் கணினிகளில் குழந்தைகள் குதூகலத்துடன் ஓவியம் தீட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
அங்குள்ள செயற்கை மரத்தின் அடியில் அமர்ந்து, புத்தகங்களைக் காண்பித்து தங்கள் குழந்தைகளுக்கு கதை சொல்லிக் கொண்டிருக்கின்றனர் தாய்மார்கள். அந்தக் காட்சியை ஒருவர் தனது செல்போன் கேமரா மூலம் படம் பிடிக்கிறார்.
பொதுத்துறை நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் ஜெயராமன் என்பவர், தனது இரண்டு குழந்தைகளுடன் வந்திருந்தார்.
"இங்கு குழந்தைகளை அழைத்து வர வேண்டும் என்று நீண்ட நாட்களாக நினைத்துக் கொண்டிருந்தேன். தமிழக அரசின் அறிவிப்பு வந்ததால், இடத்தை மாற்றுவதற்குள் நூலகத்தைப் பார்த்துவிட வேண்டும் என்பதற்காக இன்றைக்கு வந்தேன். இந்நூலகத்தைப் பார்த்துவிட்டு அசந்து போவிட்டேன். சென்னையில் உள்ள ஒரு வெளிநாட்டு நூலகத்தில் உறுப்பினராக இருக்கிறேன். நேற்றுவரையில் எனக்கு மிகப் பெரிய பிரமிப்பை ஏற்படுத்தியது அந்த நூலகம். ஆனால், அண்ணா நூலகத்துக்கு வந்த பிறகு, அந்த வெளிநாட்டு நூலகம் ஒரு துரும்புபோல எனக்குத் தெரிகிறது. தமிழ்நாட்டில் இப்படியொரு நூலகத்தை இனிமேல் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது" என்றார் ஜெயராமன்.
முன்பெல்லாம், ஐ.ஏ.எஸ். தேர்வுக்குப் படிக்கும் இளைஞர்கள், கன்னிமாரா நூலக வளாகத்தில் மரத்தடிகள் மற்றும் படிக்கட்டுகளில் அமர்ந்து படிப்பதைப் பார்க்கும்போது பரிதாபமாக இருக்கும். ஆனால், இன்றைக்கு அவர்கள் குளுகுளு கண்ணாடி அறைகளில் சொகுசு இருக்கைகளில் அமர்ந்து படித்துக் கொண்டிருக்கிறார்கள்.
"போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகிறவர்களுக்கு இந்த நூலகம் மிகப் பெரிய வரப்பிரசாதம்.இதை வேறிடத்திற்கு மாற்றினால், இதுபோன்ற வசதிகள் நிச்சயம் கிடைக்காது. ஒருவேளை, இந்நூலகத்தை மாற்றினார்கள் என்றால், என்னைப் போன்ற இளைஞர்களுக்கு மிகப் பெரிய இழப்பாகவே இருக்கும்" என்று வேதனையோடு கூறினார் ஐ.ஏ.எஸ். தேர்வுக்குத் தயாராகி வரும் அண்ணாநகரைச் சேர்ந்த சிவக்குமார்.
மக்கள் குரல்
மணிகண்டன் (கல்லூரி மாணவர்):
முந்தைய அரசின் பணிகளுக்கு சமாதி கட்டி விட்டு அதன் மீது தங்கள் புகழ் பாடும் மாளிகை கட்ட வேண்டும் என்ற எண்ணம்தான் நூலக விவகாரத்தில் வெளிப்படுகிறது. இந்த அறிவுக்கடலை மக்களின் எதிர்ப்பை மீறி அகற்றுவது நல்லதல்ல என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.
சூர்யபிரகாஷ் (கல்லூரி மாணவர்):
இடமாற்றம் மற்றும் சீரமைப்புப் பணிகளால் பொருள் இழப்பும், தேவையற்ற நிதி இழப்பும் ஏற்படும். நூல்களின் பராமரிப்பு கேள்விக்குறியாகி விடும்.
சுரேஷ்குமார் (தனியார் நிறுவன ஊழியர்):
புதிதாக அமையவுள்ள ஒருங்கிணைந்த அறிவுசார் பூங்காவுடன் அண்ணா நூலகம் இணைக்கப்பட்டால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். அரசின் முடிவை வெறும் அரசியல் கண்ணோட்டத்தோடு பார்ப்பது தவறு.
ஜோதி (பணிக்குச் செல்லும் பெண்):
குழந்தைகள் நல மருத்துவமனை அமைக்கப்படுவது வரவேற்கப்பட வேண்டியது. ஆனால், அதை ஒரு நூலகத்திற்குப் பதிலாகத் தான் அமைக்க வேண்டும் என்பதில்லை.
சிவா
தற்போதுள்ள பெரும்பாலான மருத்துவமனைகள் சரியாக செயல் படவில்லை. அவற்றை சிறப்பாக செயல்படுத்துவதற்கான நடவடிக்கை எடுத்தால், அதுவே போதும்.
நாகராஜன்
கோட்டூர்புரம் ஒரு சுகாதாரமான பகுதி. அங்கு, குழந்தைகளுக்கான மருத்துவமனை அமைப்பது சரியான முடிவு. நூலகத்தை எங்கு வேண்டுமானாலும் அமைத்துக் கொள்ளலாம். ஏனெனில், எல்லோருமே நூலகத்திற்கு போகப்போவது இல்லை. ஆனால், மருத்துவமனை என்பது அனைவருக்கும் தேவையான ஒன்று.
முருகேசன் (ஆட்டோ ஓட்டுநர்):
தி.மு.க. ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காக இம்முடிவை அரசு எடுத்திருக்கிறது. தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்ட மேம்பாலங்களை மட்டும் ஏற்றுக்கொண்டு இருக்கிறார்கள். அதைப் போல அண்ணா நூலகத்தின் மீதும் இந்த அரசு கைவைக்கக் கூடாது.
பி. வைத்தீஸ்வரன், எஸ். மனோஜ்பிரபாகர்,எஸ். கார்த்திகேயன்
நன்றி புதியதலைமுறை
ஆ.பழனியப்பன்
ஐந்து நட்சத்திர ஓட்டல்கள், ஐ.டி. பார்க் - இவற்றைக் காட்டிலும் பிரமாண்டமும், வசீகரமும் கலந்து அண்ணாந்து பார்த்து பிரமிக்க வைக்கிறது சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம். சிலநாட்களுக்குமுன் ‘அண்ணா நூற்றாண்டு நூலகம், குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்படும்’ என்று தமிழக அரசு திடீரென அறிவித்ததில் இருந்து மக்களின் வருகை இந்நூலகத்திற்கு வழக்கத்தைக் காட்டிலும் அதிகரித்திருப்பதால் ஒரு பரபரப்பும் நிலவி வருகிறது.
நூலகத்திற்கு கடந்த ஞாயிறன்று ஒரு விசிட் அடித்தோம். விடுமுறை நாள் என்பதால், மக்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது. ஏராளமான கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களால் நிரம்பி வழிந்தது பார்க்கிங் பகுதி. கையொப்பமிட்டு நூலகத்திற்குள் நுழைவதற்காக நீண்ட வரிசையில் நின்றுகொண்டிருந்தனர் மக்கள். ‘சில்ட்ரன் ஹாஸ்பிட்டலாக இதை மாற்றப் போறாங்களாம். அதான், அதுக்குள்ளே பார்த்துட்டு போயிடலாம்னு வந்தோம்’ என்கிற முணுமுணுப்புகள் கேட்டுக் கொண்டேயிருந்தன.
உள்ளே நுழைந்ததும் நாம் கண்ட காட்சி திகைப்பையும் பெருமிதத்தையும் ஒருசேர ஏற்படுத்தியது...ஆம், வசதிபடைத்தவர்கள், நடுத்தரக்குடும்பத்தினர், குடிசைப்பகுதி மக்கள் என சமூகத்தின் அனைத்து தரப்பினரும் தங்களது பிள்ளைகளோடு வந்து, விருப்பமான புத்தகங்களை ஆர்வத்தோடு வாசித்ததைப்பார்க்கையில், நூலகத்தின் குளுமையைவிட அதிகமாகக் குளிர்ந்துபோனது நம் மனது.
ஏழு தளங்கள் கொண்ட இந்தக் கண்ணாடி மாளிகை, முற்றிலுமாக ஏ.சி. வசதி, கிரானைட் தரை, சொகுசு இருக்கைகள் என அசத்தலாக இருக்கிறது.
நூலகத்திற்குச் செல்வது, அங்குள்ள புத்தகங்களைப் படிப்பது என்பதுதான் வழக்கமானது. ஆனால், வீட்டில் இருந்து சொந்தப் புத்தகங்களை எடுத்துச் சென்று படிப்பதற்கென்றே தரைத்தளத்தில் தனிப்பகுதி உள்ளது. அப்பகுதி முழுவதும் இளைஞர்களால் நிரம்பி வழிகிறது. புத்தகங்களையும், மடிக்கணினிகளையும் கொண்டு வந்து படிப்பதிலும், குறிப்பெடுப்பதிலும் மும்முரமாக இருக்கின்றனர் இளைஞர்கள்.
குறிப்பாக அண்ணா பல்கலைக்கழகம், சென்னை ஐ.ஐ.டி. மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ், சி.எல்.ஆர்.ஐ. போன்ற பல உயர்கல்வி நிறுவனங்களுக்கு மத்தியில் இந்நூலகம் அமைந்துள்ளதால் இதன் முக்கியத்துவம் மேலும் அதிகரிக்கிறது. இங்கு பயிலும் ஏராளமான மாணவர்கள் இந்நூலகத்தைப் பயன்படுத்துவதைக் காண முடிந்தது.
குழந்தைகளுக்காகவே உருவாக்கப்பட்டுள்ள பகுதி, மழலைப் பட்டாளத்தால் திணறிக் கொண்டிருக்கிறது. அங்கு வரிசையாக அமைக்கப்பட்டுள்ள மேசைக் கணினிகளில் குழந்தைகள் குதூகலத்துடன் ஓவியம் தீட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
அங்குள்ள செயற்கை மரத்தின் அடியில் அமர்ந்து, புத்தகங்களைக் காண்பித்து தங்கள் குழந்தைகளுக்கு கதை சொல்லிக் கொண்டிருக்கின்றனர் தாய்மார்கள். அந்தக் காட்சியை ஒருவர் தனது செல்போன் கேமரா மூலம் படம் பிடிக்கிறார்.
பொதுத்துறை நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் ஜெயராமன் என்பவர், தனது இரண்டு குழந்தைகளுடன் வந்திருந்தார்.
"இங்கு குழந்தைகளை அழைத்து வர வேண்டும் என்று நீண்ட நாட்களாக நினைத்துக் கொண்டிருந்தேன். தமிழக அரசின் அறிவிப்பு வந்ததால், இடத்தை மாற்றுவதற்குள் நூலகத்தைப் பார்த்துவிட வேண்டும் என்பதற்காக இன்றைக்கு வந்தேன். இந்நூலகத்தைப் பார்த்துவிட்டு அசந்து போவிட்டேன். சென்னையில் உள்ள ஒரு வெளிநாட்டு நூலகத்தில் உறுப்பினராக இருக்கிறேன். நேற்றுவரையில் எனக்கு மிகப் பெரிய பிரமிப்பை ஏற்படுத்தியது அந்த நூலகம். ஆனால், அண்ணா நூலகத்துக்கு வந்த பிறகு, அந்த வெளிநாட்டு நூலகம் ஒரு துரும்புபோல எனக்குத் தெரிகிறது. தமிழ்நாட்டில் இப்படியொரு நூலகத்தை இனிமேல் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது" என்றார் ஜெயராமன்.
முன்பெல்லாம், ஐ.ஏ.எஸ். தேர்வுக்குப் படிக்கும் இளைஞர்கள், கன்னிமாரா நூலக வளாகத்தில் மரத்தடிகள் மற்றும் படிக்கட்டுகளில் அமர்ந்து படிப்பதைப் பார்க்கும்போது பரிதாபமாக இருக்கும். ஆனால், இன்றைக்கு அவர்கள் குளுகுளு கண்ணாடி அறைகளில் சொகுசு இருக்கைகளில் அமர்ந்து படித்துக் கொண்டிருக்கிறார்கள்.
"போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகிறவர்களுக்கு இந்த நூலகம் மிகப் பெரிய வரப்பிரசாதம்.இதை வேறிடத்திற்கு மாற்றினால், இதுபோன்ற வசதிகள் நிச்சயம் கிடைக்காது. ஒருவேளை, இந்நூலகத்தை மாற்றினார்கள் என்றால், என்னைப் போன்ற இளைஞர்களுக்கு மிகப் பெரிய இழப்பாகவே இருக்கும்" என்று வேதனையோடு கூறினார் ஐ.ஏ.எஸ். தேர்வுக்குத் தயாராகி வரும் அண்ணாநகரைச் சேர்ந்த சிவக்குமார்.
மக்கள் குரல்
மணிகண்டன் (கல்லூரி மாணவர்):
முந்தைய அரசின் பணிகளுக்கு சமாதி கட்டி விட்டு அதன் மீது தங்கள் புகழ் பாடும் மாளிகை கட்ட வேண்டும் என்ற எண்ணம்தான் நூலக விவகாரத்தில் வெளிப்படுகிறது. இந்த அறிவுக்கடலை மக்களின் எதிர்ப்பை மீறி அகற்றுவது நல்லதல்ல என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.
சூர்யபிரகாஷ் (கல்லூரி மாணவர்):
இடமாற்றம் மற்றும் சீரமைப்புப் பணிகளால் பொருள் இழப்பும், தேவையற்ற நிதி இழப்பும் ஏற்படும். நூல்களின் பராமரிப்பு கேள்விக்குறியாகி விடும்.
சுரேஷ்குமார் (தனியார் நிறுவன ஊழியர்):
புதிதாக அமையவுள்ள ஒருங்கிணைந்த அறிவுசார் பூங்காவுடன் அண்ணா நூலகம் இணைக்கப்பட்டால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். அரசின் முடிவை வெறும் அரசியல் கண்ணோட்டத்தோடு பார்ப்பது தவறு.
ஜோதி (பணிக்குச் செல்லும் பெண்):
குழந்தைகள் நல மருத்துவமனை அமைக்கப்படுவது வரவேற்கப்பட வேண்டியது. ஆனால், அதை ஒரு நூலகத்திற்குப் பதிலாகத் தான் அமைக்க வேண்டும் என்பதில்லை.
சிவா
தற்போதுள்ள பெரும்பாலான மருத்துவமனைகள் சரியாக செயல் படவில்லை. அவற்றை சிறப்பாக செயல்படுத்துவதற்கான நடவடிக்கை எடுத்தால், அதுவே போதும்.
நாகராஜன்
கோட்டூர்புரம் ஒரு சுகாதாரமான பகுதி. அங்கு, குழந்தைகளுக்கான மருத்துவமனை அமைப்பது சரியான முடிவு. நூலகத்தை எங்கு வேண்டுமானாலும் அமைத்துக் கொள்ளலாம். ஏனெனில், எல்லோருமே நூலகத்திற்கு போகப்போவது இல்லை. ஆனால், மருத்துவமனை என்பது அனைவருக்கும் தேவையான ஒன்று.
முருகேசன் (ஆட்டோ ஓட்டுநர்):
தி.மு.க. ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காக இம்முடிவை அரசு எடுத்திருக்கிறது. தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்ட மேம்பாலங்களை மட்டும் ஏற்றுக்கொண்டு இருக்கிறார்கள். அதைப் போல அண்ணா நூலகத்தின் மீதும் இந்த அரசு கைவைக்கக் கூடாது.
பி. வைத்தீஸ்வரன், எஸ். மனோஜ்பிரபாகர்,எஸ். கார்த்திகேயன்
நன்றி புதியதலைமுறை
கறுப்பு பணவிவகாரம் விசாரணை துவங்கியாச்சு - யார் ? யார் என்ற விவரத்தை வெளியிட முடியாது
மத்திய அரசுக்கு எதிர்கட்சிகள் கொடுத்து வரும் பெரும் பிரச்னைகளில் ஒன்றான கறுப்பு பண விவகாரம் தொடர்பாக வருமான வரித்துறை தனது விசாரணையை துவக்கி விட்டது என்றும் இது தொடர்பான பட்டியல் எங்களிடம் இருக்கிறது அதே நேரத்தில் இதனை வெளியிட முடியாது என் நிதித்துறை செயலர் ஆர்.எஸ்., குஜ்ரால் கூறியுள்ளார்.
கறுப்பு பணம் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது . இதனை மீட்டு கொண்டு வரவேண்டும். என்றும், இதனை கொண்டு வந்தால் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு பயன்படுத்தி வளப்படுத்த முடியும் என்று எதிர்கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றன.
இந்நிலையில் ஆக்ராவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் நிதித்துறை செயலர் ஆர்.எஸ்., குஜ்ரால் பேசுகையில்: கறுப்பு பண விவகாரம் குறித்து பலர் அரசு மீது குற்றம்சாட்டுகின்றனர். அது தவறானது. நாங்கள் எங்கள் துறை தொடர்பான விசாரணையை துவக்கி விட்டோம். இதற்கென வெளிநாடுகளில் இருந்து 700 பேர் கொண்ட பட்டியல் பெறப்பட்டுள்ளது. இது ஜெனிவாவில் உள்ள கணக்குதாரர்கள். இவர்களின் பண பரிமாற்றம் விசாரணையில் உள்ளது. ஆனால் இது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. காரணம் வெளிநாடுகளினுடைய ஒப்பந்தம் அடிப்படையிலானது. எனவே பெயர் வெளியி முடியாது. மேலும் கோர்ட்டில் ரகசிய ஆவணமாக தாக்கல் செய்யப்படும். இந்த விசாரணை முழுமைபெற்று அமலாக்க துறையினரிடம் அறிக்கை பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கறுப்பு பணம் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது . இதனை மீட்டு கொண்டு வரவேண்டும். என்றும், இதனை கொண்டு வந்தால் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு பயன்படுத்தி வளப்படுத்த முடியும் என்று எதிர்கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றன.
இந்நிலையில் ஆக்ராவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் நிதித்துறை செயலர் ஆர்.எஸ்., குஜ்ரால் பேசுகையில்: கறுப்பு பண விவகாரம் குறித்து பலர் அரசு மீது குற்றம்சாட்டுகின்றனர். அது தவறானது. நாங்கள் எங்கள் துறை தொடர்பான விசாரணையை துவக்கி விட்டோம். இதற்கென வெளிநாடுகளில் இருந்து 700 பேர் கொண்ட பட்டியல் பெறப்பட்டுள்ளது. இது ஜெனிவாவில் உள்ள கணக்குதாரர்கள். இவர்களின் பண பரிமாற்றம் விசாரணையில் உள்ளது. ஆனால் இது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. காரணம் வெளிநாடுகளினுடைய ஒப்பந்தம் அடிப்படையிலானது. எனவே பெயர் வெளியி முடியாது. மேலும் கோர்ட்டில் ரகசிய ஆவணமாக தாக்கல் செய்யப்படும். இந்த விசாரணை முழுமைபெற்று அமலாக்க துறையினரிடம் அறிக்கை பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Sunday, November 20, 2011
பஸ் கட்டண உயர்வு கண்டித்து மறியல்: பள்ளி, கல்லூரி மாணவர்கள் பரிதவிப்பு
புதுக்கோட்டை அருகே பஸ் கட்டண உயர்வை கண்டித்து நடந்த சாலை மறியல் போராட்டத்தால் புதுக்கோட்டை - தஞ்சை மெயின் ரோட்டில் நேற்றுக்காலை ஒருமணி நேரம்வரை போக்குவரத்து தடைபட்டது.
பஸ் கட்டணம் மற்றும் பால் விலையை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இவை தமிழகம் முழுவதும் நேற்றுமுன்தினம் முதல் அமலுக்கு வந்தது. புதுக்கோட்டையிலிருந்து திருச்சி செல்ல பயணிகளிடமிருந்து ஏற்கனவே சாதாரண விரைவு பஸ்களில் ரூ.18, பி.பி., பஸ்களில் ரூ.20 வீதம் கட்டணம் வசூலிக்கப்பட்டது. தற்போது சாதாரண பஸ்களில் ரூ.25, பி.பி., பஸ்களில் ரூ.33 வசூலிக்கப்படுகிறது. போதாக்குறைக்கு பயணிகளிடமிருந்து மேலம் அதிக கட்டணம் வசூல் செய்வதற்காக புதுக்கோட்டையிலிருந்து திருச்சி, மதுரை, தஞ்சை, காரைக்குடி, ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்பட்டுவந்த சாதாரண விரைவு பஸ்கள் அனைத்தும் பி.பி., பஸ்களாக மாற்றப்பட்டுள்ளது. பயணிகளை கசிக்கி பிழியும் விதமான அரசு போக்குவரத்துக் கழகங்களின் இத்தகைய மறைமுக நடவடிக்கைகள் பஸ் பயணிகளை கொந்தளிக்க வைத்துள்ளது. 50 முதல் 80 சதவீதம் வரை பஸ் கட்டணம் உயர்ந்துள்ளதால் அதிர்ச்சியடைந்துள்ள பயணிகள் பஸ் கட்டண உயர்வை வாபஸ் பெறக்கோரி அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுக்கோட்டை அடுத்த இச்சடியில் பஸ் கட்டண உயர்வை கண்டித்தும், வாபஸ் பெறக் கோரியும் அப்பகுதியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பெண்கள், விவசாயிகள் உட்பட 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டதால் பெரும்பரபரப்பு நிலவியது. போராட்டத்தை தொடர்ந்து புதுக்கோட்டை - தஞ்சை சாலையில் நேற்றுக்காலை 8.15 மணி முதல் 9.15 மணிவரை பஸ் உள்ளிட்ட வாகன போக்குவரத்து தடைபட்டது. இதன்காரணாக பஸ்களில் பயணம் செய்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பயணிகள் பரிதவிப்புக்குள்ளாயினர். சம்பவஇடம் வந்த போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களை சமாதானப்படுத்தினர். பஸ் கட்டண உயர்வு தவிர்க்க முடியாத ஒன்று. இதற்காக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதென்பது பயணிகளை மேலும் பாதிப்புக்குள்ளாக்கும் என அவர்களுக்கு அறிவுரை வழங்கினர். இருந்தும் மறியல் போராட்டத்தை கைவிட அப்பகுதி மக்கள் மறுத்ததால் ஆத்திரமடைந்த போலீஸார் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை துவக்கினர். இதையடுத்து அனைவரும் கலைந்துசென்றனர்.
இந்நிலையில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி., தமிழ்ச்சந்திரன் எச்சரித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை: புகார் மற்றும் கோரிக்கைகளுக்கு தொடர்புடைய அரசுத்துறை அதிகாரிகளிடம் பேசி தீர்வுகாண வேண்டும். மாறாக போக்குவரத்துக்கு இடையூறாகவும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் விதமாக சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபடுவதை தவிர்க்கவேண்டும். மீறுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பஸ் கட்டணம் மற்றும் பால் விலையை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இவை தமிழகம் முழுவதும் நேற்றுமுன்தினம் முதல் அமலுக்கு வந்தது. புதுக்கோட்டையிலிருந்து திருச்சி செல்ல பயணிகளிடமிருந்து ஏற்கனவே சாதாரண விரைவு பஸ்களில் ரூ.18, பி.பி., பஸ்களில் ரூ.20 வீதம் கட்டணம் வசூலிக்கப்பட்டது. தற்போது சாதாரண பஸ்களில் ரூ.25, பி.பி., பஸ்களில் ரூ.33 வசூலிக்கப்படுகிறது. போதாக்குறைக்கு பயணிகளிடமிருந்து மேலம் அதிக கட்டணம் வசூல் செய்வதற்காக புதுக்கோட்டையிலிருந்து திருச்சி, மதுரை, தஞ்சை, காரைக்குடி, ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்பட்டுவந்த சாதாரண விரைவு பஸ்கள் அனைத்தும் பி.பி., பஸ்களாக மாற்றப்பட்டுள்ளது. பயணிகளை கசிக்கி பிழியும் விதமான அரசு போக்குவரத்துக் கழகங்களின் இத்தகைய மறைமுக நடவடிக்கைகள் பஸ் பயணிகளை கொந்தளிக்க வைத்துள்ளது. 50 முதல் 80 சதவீதம் வரை பஸ் கட்டணம் உயர்ந்துள்ளதால் அதிர்ச்சியடைந்துள்ள பயணிகள் பஸ் கட்டண உயர்வை வாபஸ் பெறக்கோரி அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுக்கோட்டை அடுத்த இச்சடியில் பஸ் கட்டண உயர்வை கண்டித்தும், வாபஸ் பெறக் கோரியும் அப்பகுதியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பெண்கள், விவசாயிகள் உட்பட 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டதால் பெரும்பரபரப்பு நிலவியது. போராட்டத்தை தொடர்ந்து புதுக்கோட்டை - தஞ்சை சாலையில் நேற்றுக்காலை 8.15 மணி முதல் 9.15 மணிவரை பஸ் உள்ளிட்ட வாகன போக்குவரத்து தடைபட்டது. இதன்காரணாக பஸ்களில் பயணம் செய்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பயணிகள் பரிதவிப்புக்குள்ளாயினர். சம்பவஇடம் வந்த போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களை சமாதானப்படுத்தினர். பஸ் கட்டண உயர்வு தவிர்க்க முடியாத ஒன்று. இதற்காக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதென்பது பயணிகளை மேலும் பாதிப்புக்குள்ளாக்கும் என அவர்களுக்கு அறிவுரை வழங்கினர். இருந்தும் மறியல் போராட்டத்தை கைவிட அப்பகுதி மக்கள் மறுத்ததால் ஆத்திரமடைந்த போலீஸார் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை துவக்கினர். இதையடுத்து அனைவரும் கலைந்துசென்றனர்.
இந்நிலையில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி., தமிழ்ச்சந்திரன் எச்சரித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை: புகார் மற்றும் கோரிக்கைகளுக்கு தொடர்புடைய அரசுத்துறை அதிகாரிகளிடம் பேசி தீர்வுகாண வேண்டும். மாறாக போக்குவரத்துக்கு இடையூறாகவும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் விதமாக சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபடுவதை தவிர்க்கவேண்டும். மீறுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அகில இந்திய துணை தொழிற்தேர்வு : நவ., 30க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
சென்னையில் உள்ள தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் சார்பில் ஆண்டுதோறும் அகில இந்திய துணைத் தொழிற்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 2012க்கான தொழிற்தேர்வு ஜனவரி, ஃபிப்ரவரியில் நடக்கிறது.
இதில், தனித் தேர்வர்களாக கலந்துகொண்டு தேர்வு எழுத விரும்புவோர் 23 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும். தொழிற் பிரிவுக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதி பெற்றவராகவும், அரசு பதிவுபெற்ற நிறுவனங்களில் ஐந்து ஆண்டுகள் அனுபவம் பெற்ற பணியாளர்களாகவும் இருத்தல்வேண்டும். இதனடிப்படையில் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு முதல்நிலை தகுதித்தேர்வு நடத்தப்படும். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே ஜனவரி மற்றும் ஃபிப்ரவரியில் நடைபெறவுள்ள அகில இந்திய துணைத் தொழிற்தேர்வை தனித் தேர்வர்களாக எழுத முடியும்.
இதற்கான விண்ணப்ப படிவம் மற்றும் விளக்க குறிப்பேடுகள் அனைத்து அரசு ஐ.டி.ஐ.,க்களில் வழங்கப்பட்டு வருகிறது. ரூ.50 செலுத்தி விண்ணப்பம் பெற்றுக்கொள்ளலாம். புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் புதுக்கோட்டை அரசு ஐ.டி.ஐ.,க்கு நேரில் சென்று விண்ணப்பம் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை இம்மாதம் 30ம் தேதி மாலை 5 மணிக்குள் அதே அரசு ஐ.டி.ஐ., முதல்வரிடம் ஒப்படைக்க வேண்டும்.
இதில், தனித் தேர்வர்களாக கலந்துகொண்டு தேர்வு எழுத விரும்புவோர் 23 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும். தொழிற் பிரிவுக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதி பெற்றவராகவும், அரசு பதிவுபெற்ற நிறுவனங்களில் ஐந்து ஆண்டுகள் அனுபவம் பெற்ற பணியாளர்களாகவும் இருத்தல்வேண்டும். இதனடிப்படையில் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு முதல்நிலை தகுதித்தேர்வு நடத்தப்படும். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே ஜனவரி மற்றும் ஃபிப்ரவரியில் நடைபெறவுள்ள அகில இந்திய துணைத் தொழிற்தேர்வை தனித் தேர்வர்களாக எழுத முடியும்.
இதற்கான விண்ணப்ப படிவம் மற்றும் விளக்க குறிப்பேடுகள் அனைத்து அரசு ஐ.டி.ஐ.,க்களில் வழங்கப்பட்டு வருகிறது. ரூ.50 செலுத்தி விண்ணப்பம் பெற்றுக்கொள்ளலாம். புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் புதுக்கோட்டை அரசு ஐ.டி.ஐ.,க்கு நேரில் சென்று விண்ணப்பம் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை இம்மாதம் 30ம் தேதி மாலை 5 மணிக்குள் அதே அரசு ஐ.டி.ஐ., முதல்வரிடம் ஒப்படைக்க வேண்டும்.
“ கெஞ்சியவர்கள் மிஞ்சுகிறார்கள் ”- ஜெ.,- “குடும்ப ஆட்சி போய் கும்பல் ஆட்சி ” - விஜயகாந்த்
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு குறித்து முதல்வர் ஜெ., இன்று அளித்துள்ள விளக்கத்தில் விலையை உயர்த்தாத பட்சத்தில் பொதுதுறை நிறுவனங்களை மூட வேண்டியிருக்கும் என்றும், இது தொடர்பாக கருணாநிதி முதலைக்கண்ணீர் வடிக்கிறார் என்றும் , ஆட்சிக்கு வருவதற்கு முன்னர்உங்களால்தான் முடியும் என்று கூறியவர்கள் இப்போது எதிர்க்கிறார்கள் என கூறியுள்ளார். இதற்கிடையில் மதுரையில் ஒரு திருமண விழாவில் பங்கேற்று பேசிய எதிர்கட்சி தலைவர் விஜயகாந்த் , தமிழகத்தில் விலை உயர்வை எதிர்த்து உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளார். மேலும் மாற்றம் வேண்டும் என்று எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. தற்போது தமிழகத்தில் குடும்ப ஆட்சி போய் கும்பல் ஆட்சி நடக்கிறது என்றார்.
விலைஉயர்வு குறித்து இன்று ஜெ., வெளியிட்டுள்ள அறிக்கையில்: பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ஏற்படுத்தப்பட்டு திவாலாகும் சூழ்நிலையில் உள்ள மின்சார வாரியம், அரசு போக்குவரத்துக் கழகங்கள் மற்றும் ஆவின் நிறுவனம் ஆகியவற்றை உயிர்பிப்பிக்கவும், நிறுவனங்கள் மூலம் மக்களுக்கு தொடர்ந்து தங்களது சேவையை ஆற்றவும் வழிவகை குறித்து 17.11.2011 அன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, கட்டண உயர்வுகள் பற்றி முடிவுகள் எடுக்கப்பட்டன.இந்த முடிவுகள் எடுக்கப்பட்டதன் காரணங்களை அன்றே தொலைக்காட்சி மூலம் நான் எடுத்துரைத்து , அரசின் இந்த நடவடிக்கைக்கு ஆதரவினை நல்கிட வேண்டும் என்று மக்களுக்கு வேண்டுகோளும் விடுத்திருந்தேன். இந்த கட்டண உயர்வுகளை கண்டித்து, பல்வேறு எதிர்க் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் அறிக்கைகள் விடுத்துள்ளனர்.
அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகித்து சட்டமன்ற தேர்தலை சந்தித்த கட்சிகளின் தலைவர்கள் கூட இந்தக்கட்டண உயர்வுகளுக்கு தங்கள் கண்டனத்தை தெரிவித்துக் கொண்டு, அவற்றை திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். மக்கள் நலனை விடுத்து வேறு பல காரணங்களுக்காக பல்வேறு முடிவுகளை முந்தைய மைனாரிட்டி தி.மு.க. அரசு எடுத்த காரணத்தால்தான், எதிர்கட்சி என்ற அந்தஸ்தைக் கூட வழங்காமல், சட்டமன்ற தேர்தலில் மக்கள் திமுகவை முற்றிலும் புறக்கணித்துவிட்டனர். இவ்வாறு புறக்கணிக்கப்பட்டதற்கு, பொதுத்துறை நிறுவனங்களை முந்தைய தி.மு.க. அரசு சீரழித்ததும் ஒரு காரணம். இது போன்ற கடினமான முடிவை எடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு எனது தலைமையிலான அரசை ஆளாக்கிவிட்டு, தாங்கள்தான் மக்களை பாதுகாப்பதைப்போல நீலிக்கண்ணீர் வடிக்கும் கருணாநிதியின் செயல் சாத்தான் வேதம் ஒதுவது போல் உள்ளது.
மின்சார வாரியம், அரசு போக்குவரத்துக் கழகங்கள் , ஆவின் நிறுவனம் ஆகிய அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் மிகுந்த நஷ்டத்திற்கு உள்ளாக்கி அவற்றை செயலிழக்கச் செய்த பெருமை முந்தைய மைனாரிட்டி திமுக அரசையும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியையுமே சாரும். அரசு அதிகாரிகள், கட்டணங்களை உயர்த்த இவரிடம் கேட்டுக்கொண்டது போலவும், ஆனால் மக்களுக்காக இவர் உயர்த்த வேண்டாம் என்று கூறி அரசு கடன் வாங்கி இந்த நிறுவனங்களுக்கு வழங்கலாம் என்று தான் கூறியதைப் போலவும் ஒரு புளுகு மூட்டையை அவிழ்த்து விட்டிருக்கிறார் கருணாநிதி.
குழந்தையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டி விடுவதா ? பொதுத்துறை நிறுவனங்களை முற்றிலும் முடங்கச் செய்துவிட்டு, அவற்றை மரணப்படுக்கையில் தள்ளி விட்டு, இன்று வேறு வழியின்றி கட்டண உயர்வுகள் செயல்படுத்தப்படும் போது மக்களுக்காக பரிந்து பேசுவது போல பாசாங்கு செய்வது குழந்தையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டி விடுவது போல் உள்ளது.இது முதலைக் கண்ணீர்தான் என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். இது போன்ற அறிக்கைகளால், தமிழக மக்கள் ஒன்றும் ஏமாந்துவிட மாட்டார்கள். பொதுத்துறை நிறுவனங்களை முடக்கிய கருணாநிதிக்கு இது போன்ற ஒரு கண்டன அறிக்கையை வெளியிட எந்தவிதமான தார்மீக உரிமையும் இல்லை. அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் கடந்த ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தலைச் சந்தித்து, தற்போது தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகளாக உள்ள கட்சிகளின் தலைவர்களில் பெரும்பாலானோர், சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னால், என்னைச் சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினர்.
அப்போது, தமிழ்நாட்டின் மோசமான நிதிநிலை குறித்தும், மைனாரிட்டி திமுக அரசின் நிர்வாக சீர்கேடுகள் குறித்தும், பொது மக்கள் நலனை எண்ணிப்பாராத செயல்பாடுகள் குறித்தும் என்னிடம் கவலை தெரிவித்தனர். இவற்றையெல்லாம் சரிசெய்ய வேண்டும் என்றும்; நான் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட பின்னால்தான் இவற்றையெல்லாம் சரி செய்ய முடியும் என்றும்; கடினமான முடிவுகளை, தைரியமாக, என்னால் தான் எடுக்க முடியும் என்றும் கூறினர்.அப்போது அவ்வாறு கூறிவிட்டு, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த கட்டண உயர்வுகளுக்கு கண்டன அறிக்கைகளை விடுவது சரியான செயல்தானா என்பதை அவர்கள் மனசாட்சியிடமே விட்டு விடுகிறேன். முன்பு, தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்தும், பொதுத் துறை நிறுவனங்களின் நிலை குறித்தும் கவலை தெரிவித்தவர்கள், தற்போது கண்டனம் தெரிவிப்பது இரட்டை வேடம் தானே! பொதுமக்கள் நன்கு உணர்ந்து அரசியல் ஆதாயத்திற்கென அறிக்கை விடுபவர்களின் பசப்பு வார்த்தைகளில் மயங்காமல், அவர்கள் விரிக்கும் மாயவலையில் விழாமல், எனது தலைமையிலான அரசுக்கு தங்களது முழு ஒத்துழைப்பினையும், ஆதரவினையும் தொடர்ந்து அளிக்க வேண்டும் என்று தமிழக மக்களை மீண்டும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு ஜெ., தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
மதுரை திருமண விழாவில் விஜயகாந்த் ஆவேசம்: மதுரையில் நடந்த திருமண விழாவில் பேசிய எதிர்கட்சி தலைவர் விஜயகாந்த்: “தமிழகத்தில் பால் மற்றும் பஸ் கட்டண உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு நிதி தரவில்லை என முதல்வர் ஜெயலலிதா கூறுகிறார். ஆனால் மத்திய அரசு நிறைய நிதி தருகிறது. இதைச் சொன்னால் நான் காங்கிரசுக்கு ஆதரவானவன் என்று கூறுவார்கள். ஆனால் நான் நியாயத்தை கூறுகிறேன். மாற்றத்தை ஏற்படுத்த நினைத்த தமிழக மக்களுக்கு தற்போது ஏமாற்றத்தை தந்துள்ளது தமிழக அரசு. குடும்ப ஆட்சி போய் தற்போது கும்பல் ஆட்சி நடந்து வருகிறது. விலை உயர்வை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடத்தவிருக்கிறேன். இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.
விலைஉயர்வு குறித்து இன்று ஜெ., வெளியிட்டுள்ள அறிக்கையில்: பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ஏற்படுத்தப்பட்டு திவாலாகும் சூழ்நிலையில் உள்ள மின்சார வாரியம், அரசு போக்குவரத்துக் கழகங்கள் மற்றும் ஆவின் நிறுவனம் ஆகியவற்றை உயிர்பிப்பிக்கவும், நிறுவனங்கள் மூலம் மக்களுக்கு தொடர்ந்து தங்களது சேவையை ஆற்றவும் வழிவகை குறித்து 17.11.2011 அன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, கட்டண உயர்வுகள் பற்றி முடிவுகள் எடுக்கப்பட்டன.இந்த முடிவுகள் எடுக்கப்பட்டதன் காரணங்களை அன்றே தொலைக்காட்சி மூலம் நான் எடுத்துரைத்து , அரசின் இந்த நடவடிக்கைக்கு ஆதரவினை நல்கிட வேண்டும் என்று மக்களுக்கு வேண்டுகோளும் விடுத்திருந்தேன். இந்த கட்டண உயர்வுகளை கண்டித்து, பல்வேறு எதிர்க் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் அறிக்கைகள் விடுத்துள்ளனர்.
அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகித்து சட்டமன்ற தேர்தலை சந்தித்த கட்சிகளின் தலைவர்கள் கூட இந்தக்கட்டண உயர்வுகளுக்கு தங்கள் கண்டனத்தை தெரிவித்துக் கொண்டு, அவற்றை திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். மக்கள் நலனை விடுத்து வேறு பல காரணங்களுக்காக பல்வேறு முடிவுகளை முந்தைய மைனாரிட்டி தி.மு.க. அரசு எடுத்த காரணத்தால்தான், எதிர்கட்சி என்ற அந்தஸ்தைக் கூட வழங்காமல், சட்டமன்ற தேர்தலில் மக்கள் திமுகவை முற்றிலும் புறக்கணித்துவிட்டனர். இவ்வாறு புறக்கணிக்கப்பட்டதற்கு, பொதுத்துறை நிறுவனங்களை முந்தைய தி.மு.க. அரசு சீரழித்ததும் ஒரு காரணம். இது போன்ற கடினமான முடிவை எடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு எனது தலைமையிலான அரசை ஆளாக்கிவிட்டு, தாங்கள்தான் மக்களை பாதுகாப்பதைப்போல நீலிக்கண்ணீர் வடிக்கும் கருணாநிதியின் செயல் சாத்தான் வேதம் ஒதுவது போல் உள்ளது.
மின்சார வாரியம், அரசு போக்குவரத்துக் கழகங்கள் , ஆவின் நிறுவனம் ஆகிய அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் மிகுந்த நஷ்டத்திற்கு உள்ளாக்கி அவற்றை செயலிழக்கச் செய்த பெருமை முந்தைய மைனாரிட்டி திமுக அரசையும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியையுமே சாரும். அரசு அதிகாரிகள், கட்டணங்களை உயர்த்த இவரிடம் கேட்டுக்கொண்டது போலவும், ஆனால் மக்களுக்காக இவர் உயர்த்த வேண்டாம் என்று கூறி அரசு கடன் வாங்கி இந்த நிறுவனங்களுக்கு வழங்கலாம் என்று தான் கூறியதைப் போலவும் ஒரு புளுகு மூட்டையை அவிழ்த்து விட்டிருக்கிறார் கருணாநிதி.
குழந்தையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டி விடுவதா ? பொதுத்துறை நிறுவனங்களை முற்றிலும் முடங்கச் செய்துவிட்டு, அவற்றை மரணப்படுக்கையில் தள்ளி விட்டு, இன்று வேறு வழியின்றி கட்டண உயர்வுகள் செயல்படுத்தப்படும் போது மக்களுக்காக பரிந்து பேசுவது போல பாசாங்கு செய்வது குழந்தையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டி விடுவது போல் உள்ளது.இது முதலைக் கண்ணீர்தான் என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். இது போன்ற அறிக்கைகளால், தமிழக மக்கள் ஒன்றும் ஏமாந்துவிட மாட்டார்கள். பொதுத்துறை நிறுவனங்களை முடக்கிய கருணாநிதிக்கு இது போன்ற ஒரு கண்டன அறிக்கையை வெளியிட எந்தவிதமான தார்மீக உரிமையும் இல்லை. அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் கடந்த ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தலைச் சந்தித்து, தற்போது தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகளாக உள்ள கட்சிகளின் தலைவர்களில் பெரும்பாலானோர், சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னால், என்னைச் சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினர்.
அப்போது, தமிழ்நாட்டின் மோசமான நிதிநிலை குறித்தும், மைனாரிட்டி திமுக அரசின் நிர்வாக சீர்கேடுகள் குறித்தும், பொது மக்கள் நலனை எண்ணிப்பாராத செயல்பாடுகள் குறித்தும் என்னிடம் கவலை தெரிவித்தனர். இவற்றையெல்லாம் சரிசெய்ய வேண்டும் என்றும்; நான் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட பின்னால்தான் இவற்றையெல்லாம் சரி செய்ய முடியும் என்றும்; கடினமான முடிவுகளை, தைரியமாக, என்னால் தான் எடுக்க முடியும் என்றும் கூறினர்.அப்போது அவ்வாறு கூறிவிட்டு, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த கட்டண உயர்வுகளுக்கு கண்டன அறிக்கைகளை விடுவது சரியான செயல்தானா என்பதை அவர்கள் மனசாட்சியிடமே விட்டு விடுகிறேன். முன்பு, தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்தும், பொதுத் துறை நிறுவனங்களின் நிலை குறித்தும் கவலை தெரிவித்தவர்கள், தற்போது கண்டனம் தெரிவிப்பது இரட்டை வேடம் தானே! பொதுமக்கள் நன்கு உணர்ந்து அரசியல் ஆதாயத்திற்கென அறிக்கை விடுபவர்களின் பசப்பு வார்த்தைகளில் மயங்காமல், அவர்கள் விரிக்கும் மாயவலையில் விழாமல், எனது தலைமையிலான அரசுக்கு தங்களது முழு ஒத்துழைப்பினையும், ஆதரவினையும் தொடர்ந்து அளிக்க வேண்டும் என்று தமிழக மக்களை மீண்டும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு ஜெ., தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
மதுரை திருமண விழாவில் விஜயகாந்த் ஆவேசம்: மதுரையில் நடந்த திருமண விழாவில் பேசிய எதிர்கட்சி தலைவர் விஜயகாந்த்: “தமிழகத்தில் பால் மற்றும் பஸ் கட்டண உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு நிதி தரவில்லை என முதல்வர் ஜெயலலிதா கூறுகிறார். ஆனால் மத்திய அரசு நிறைய நிதி தருகிறது. இதைச் சொன்னால் நான் காங்கிரசுக்கு ஆதரவானவன் என்று கூறுவார்கள். ஆனால் நான் நியாயத்தை கூறுகிறேன். மாற்றத்தை ஏற்படுத்த நினைத்த தமிழக மக்களுக்கு தற்போது ஏமாற்றத்தை தந்துள்ளது தமிழக அரசு. குடும்ப ஆட்சி போய் தற்போது கும்பல் ஆட்சி நடந்து வருகிறது. விலை உயர்வை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடத்தவிருக்கிறேன். இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.
Tuesday, November 15, 2011
Monday, November 14, 2011
பள்ளியில் மாணவர்களை ஆசிரியர் அடிக்க கூடாது : மத்திய அரசு அறிவுரை!
நாட்டின் முதலாவது கல்வி அமைச்சரான அபுல் கலாம் ஆசாத் பிறந்த நாளை, தேசிய கல்வி நாள் விழாவாகக் கொண்டாட, பள்ளிகளுக்கு மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கடந்த 11ம் தேதி அவரது பிறந்த நாள் விழா பள்ளிகளில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அனைத்து அரசு, நிதியுதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கும் மத்திய அரசிடம் இருந்து அனுப்பப்பட்டு உள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
பள்ளி மாணவ, மாணவிகளை ஆசிரியர்கள் எதற்காகவும் அடிக்கவோ, திட்டவோ கூடாது. அவர்களின் மனம் நோகும்படி நடந்து கொள்ளக் கூடாது. மாணவர்களின் மனம் அறிந்து, அவர்களுக்குப் புரியும்படி பாடம் நடத்த வேண்டும்.
வினாத்தாள் எளிமையாக இருக்க வேண்டும். எந்த ஒரு மாணவனையும் திட்டமிட்டு தேர்வில் தோல்வி அடையச் செய்யக் கூடாது.
மாணவர்களை சாதி, மத, பொருளாதார அடிப்படையில் பாகுபடுத்தக் கூடாது. மாணவர் சேர்க்கைக்கு வரும் குழந்தைகளை எந்தக் காரணம் கொண்டும் நிராகரிக்கக் கூடாது. பள்ளியில் இருந்து நீக்கவும் கூடாது.
இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பள்ளி மாணவ, மாணவிகளை ஆசிரியர்கள் எதற்காகவும் அடிக்கவோ, திட்டவோ கூடாது. அவர்களின் மனம் நோகும்படி நடந்து கொள்ளக் கூடாது. மாணவர்களின் மனம் அறிந்து, அவர்களுக்குப் புரியும்படி பாடம் நடத்த வேண்டும்.
வினாத்தாள் எளிமையாக இருக்க வேண்டும். எந்த ஒரு மாணவனையும் திட்டமிட்டு தேர்வில் தோல்வி அடையச் செய்யக் கூடாது.
மாணவர்களை சாதி, மத, பொருளாதார அடிப்படையில் பாகுபடுத்தக் கூடாது. மாணவர் சேர்க்கைக்கு வரும் குழந்தைகளை எந்தக் காரணம் கொண்டும் நிராகரிக்கக் கூடாது. பள்ளியில் இருந்து நீக்கவும் கூடாது.
இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
புதுகை கவுன்சிலர் மொபைல் எண் அறிவிப்பு அவசர தேவைக்கு அழைக்க ஏற்பாடு
புதுக்கோட்டை: புதுக்கோட்டை நகரில் குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அவசர தேவைகளுக்கு நகராட்சித் தலைவர், ஆணையர் மற்றும் கவுன்சிலர்களை தொடர்புகொள்ள விரும்புவோர் அவர்களது மொபைல் ஃபோன் எண்களில் டயல் செய்யலாம்.
நகராட்சித் தலைவர் கார்த்திக்தொண்டைமான்: 98424 64465, ஆணையர் பாலகிருஷ்ணன் - 94442 24398, துணைத் தலைவர் அப்துல் ரகுமான்(20வது வார்டு) - 94431 24437 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம்.
ஒன்றாவது வார்டு கவுன்சிலர் செல்வராஜன்: 94429 24258, 2வது வார்டு கவுன்சிலர் வீரக்குமார் - 88839 96160, 3வது வார்டு கவுன்சிலர் செல்வராஜ் - 99655 93747, 4வது வார்டு கவுன்சிலர் முத்துசாமி - 93440 24748, 5வது வார்டு கவுன்சிலர் பாஸ்கர் - 98424 51666.
ஆறாவது வார்டு கவுன்சிலர் திரவியம்: 99658 38887, 7வது வார்டு கவுன்சிலர் ராஜாத்தி - 83443 06300, 8வது வார்டு கவுன்சிலர் செல்வம் - 04322 221181, 9வது வார்டு கவுன்சிலர் அறிவுடைநம்பி - 98946 12607, 10வது வார்டு கவுன்சிலர் மோகன் - 94430 23440.
பதினொன்றாவது வார்டு கவுன்சிலர் காசிலிங்கம்: 73739 35597, 12வது வார்டு கவுன்சிலர் ராமதாஸ் - 94435 93181, 13வது வார்டு கவுன்சிலர் அய்யப்பன் - 89731 27657, 14வது வார்டு கவுன்சிலர் அருணாச்சலம் - 94434 88572, 15வது வார்டு கவுன்சிலர் பாண்டிக்குமார் - 97884 18508.
பதினாறாவது வார்டு கவுன்சிலர் சரவணன்: 94430 14053, 17வது வார்டு கவுன்சிலர் குமார் - 98425 71221, 18வது வார்டு கவுன்சிலர் மீனாள் - 98941 55789, 19வது வார்டு கவுன்சிலர் - அடைக்கலவன் 97502 54157.
21வது வார்டு கவுன்சிலர் கண்ணன்: 97504 88484, 22வது வார்டு கவுன்சிலர் தியாகராஜன் - 99657 48408, 23வது வார்டு கவுன்சிலர் சத்தீஷ்குமார் - 98424 81668, 24வது வார்டு கவுன்சிலர் மலர்விழி - 94437 87498, 25வது வார்டு கவுன்சிலர் மனோன்மணி - 98652 73865.
26வது வார்டு கவுன்சிலர் சுபத்ராதேவி: 98424 20244, 27வது வார்டு கவுன்சிலர் கிருஷ்ணகுமார் - 98656 56269, 28வது வார்டு கவுன்சிலர் ஆறுமுகம் - 94431 64166, 29வது வார்டு கவுன்சிலர் உடையம்மை - 94431 79976, 30வது வார்டு கவுன்சிலர் லெட்சுமிகாந்தம் - 97919 16971.
31வது வார்டு கவுன்சிலர் எட்வர்ட் சந்தோசநாதன்: 93440 22585, 32வது வார்டு கவுன்சிலர் மணிவேலன் - 98424 76140, 33வது வார்டு கவுன்சிலர் ஆயிரம்வள்ளி - 99422 52732, 34வது வார்டு கவுன்சிலர் கிரேசி - 94434 94946, 35வது வார்டு கவுன்சிலர் சையது இப்ராஹீம் - 98942 24124.
36வது வார்டு கவுன்சிலர் - பரமேஸ்வரி: 98425 47424, 37வது வார்டு கவுன்சிலர் ரூபாராணி - 98425 31218, 38வது வார்டு கவுன்சிலர் சந்திரசேகரன் - 98650 67611, 39வது வார்டு கவுன்சிலர் நடராஜன் - 89732 65659, 40வது வார்டு கவுன்சிலர் ஈஸ்வரி - 99767 88740. 41வது வார்டு கவுன்சிலர் பாண்டியன் - 99761 11927, 42வது வார்டு கவுன்சிலர் கமலா - 98426 99804.
நகராட்சித் தலைவர் கார்த்திக்தொண்டைமான்: 98424 64465, ஆணையர் பாலகிருஷ்ணன் - 94442 24398, துணைத் தலைவர் அப்துல் ரகுமான்(20வது வார்டு) - 94431 24437 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம்.
ஒன்றாவது வார்டு கவுன்சிலர் செல்வராஜன்: 94429 24258, 2வது வார்டு கவுன்சிலர் வீரக்குமார் - 88839 96160, 3வது வார்டு கவுன்சிலர் செல்வராஜ் - 99655 93747, 4வது வார்டு கவுன்சிலர் முத்துசாமி - 93440 24748, 5வது வார்டு கவுன்சிலர் பாஸ்கர் - 98424 51666.
ஆறாவது வார்டு கவுன்சிலர் திரவியம்: 99658 38887, 7வது வார்டு கவுன்சிலர் ராஜாத்தி - 83443 06300, 8வது வார்டு கவுன்சிலர் செல்வம் - 04322 221181, 9வது வார்டு கவுன்சிலர் அறிவுடைநம்பி - 98946 12607, 10வது வார்டு கவுன்சிலர் மோகன் - 94430 23440.
பதினொன்றாவது வார்டு கவுன்சிலர் காசிலிங்கம்: 73739 35597, 12வது வார்டு கவுன்சிலர் ராமதாஸ் - 94435 93181, 13வது வார்டு கவுன்சிலர் அய்யப்பன் - 89731 27657, 14வது வார்டு கவுன்சிலர் அருணாச்சலம் - 94434 88572, 15வது வார்டு கவுன்சிலர் பாண்டிக்குமார் - 97884 18508.
பதினாறாவது வார்டு கவுன்சிலர் சரவணன்: 94430 14053, 17வது வார்டு கவுன்சிலர் குமார் - 98425 71221, 18வது வார்டு கவுன்சிலர் மீனாள் - 98941 55789, 19வது வார்டு கவுன்சிலர் - அடைக்கலவன் 97502 54157.
21வது வார்டு கவுன்சிலர் கண்ணன்: 97504 88484, 22வது வார்டு கவுன்சிலர் தியாகராஜன் - 99657 48408, 23வது வார்டு கவுன்சிலர் சத்தீஷ்குமார் - 98424 81668, 24வது வார்டு கவுன்சிலர் மலர்விழி - 94437 87498, 25வது வார்டு கவுன்சிலர் மனோன்மணி - 98652 73865.
26வது வார்டு கவுன்சிலர் சுபத்ராதேவி: 98424 20244, 27வது வார்டு கவுன்சிலர் கிருஷ்ணகுமார் - 98656 56269, 28வது வார்டு கவுன்சிலர் ஆறுமுகம் - 94431 64166, 29வது வார்டு கவுன்சிலர் உடையம்மை - 94431 79976, 30வது வார்டு கவுன்சிலர் லெட்சுமிகாந்தம் - 97919 16971.
31வது வார்டு கவுன்சிலர் எட்வர்ட் சந்தோசநாதன்: 93440 22585, 32வது வார்டு கவுன்சிலர் மணிவேலன் - 98424 76140, 33வது வார்டு கவுன்சிலர் ஆயிரம்வள்ளி - 99422 52732, 34வது வார்டு கவுன்சிலர் கிரேசி - 94434 94946, 35வது வார்டு கவுன்சிலர் சையது இப்ராஹீம் - 98942 24124.
36வது வார்டு கவுன்சிலர் - பரமேஸ்வரி: 98425 47424, 37வது வார்டு கவுன்சிலர் ரூபாராணி - 98425 31218, 38வது வார்டு கவுன்சிலர் சந்திரசேகரன் - 98650 67611, 39வது வார்டு கவுன்சிலர் நடராஜன் - 89732 65659, 40வது வார்டு கவுன்சிலர் ஈஸ்வரி - 99767 88740. 41வது வார்டு கவுன்சிலர் பாண்டியன் - 99761 11927, 42வது வார்டு கவுன்சிலர் கமலா - 98426 99804.
Friday, November 4, 2011
அறந்தாங்கி ஒன்றியக்குழு தலைவர் பணிகளை தொடங்கினார்
அறந்தாங்கி : அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவராக, ஒன்றிய திமுக செயலாளர் மெய்யநாதன் 2வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். நேற்று அவர், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கோப்புகளில் கையெழுத்திட்டு, பணியை தொடங்கினார். ஊராட்சி ஒன்றிய ஆணையர் வேலுச்சாமி வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை சேர்ந்த துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஒன்றிய அலுவலர்கள், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி தலைவர்கள் ஆகியோர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். அப்போது ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வெள்ளைச்சாமி, மாங்குடி ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை சேர்ந்த துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஒன்றிய அலுவலர்கள், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி தலைவர்கள் ஆகியோர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். அப்போது ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வெள்ளைச்சாமி, மாங்குடி ஆகியோர் உடனிருந்தனர்.
ராஜேந்திரபுரத்தில் புதிதாக கட்டப்பட்ட பள்ளிவாசல் திறப்பு
அறந்தாங்கி : அறந்தாங்கி அருகே ராஜேந்திரபுரம் நைனாமுகமது கல் லூரி வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட ஜூம்மா பள்ளிவாசல் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. கல்லூரி தாளாளர் முகமது பாரூக் தலைமை வகித்தார். அறக்கட்டளை உறுப்பினர்கள் பி.நைனாமுகமது, பி.கே.நைனாமுகமது, என். எஸ்.நைனாமுகமது, கே.நைனாமுகமது ஆகி யோர் முன்னிலை வகித்தனர். விழாவில், புதுக்கோட்டை மாவட்ட ஜமா அதுல்உலமா பேரவை தலைவரும், அஞ்சல் வழி கல்வி பேராசிரியருமான அப்துல் ஜப்பார் பாசில்பாகவி, சிவகங்கை மாவட்ட ஜமாஅதுல் உலமா பேரவை தலைவர் முகமது ரிமா பாஜில் பா கவி ஆகியோர் பேசினர்.
சென்னை மகளிர் அரபிக் கல்லூரி முதல் வரும், சுன்னத் வல் ஜமாத் பேரவை தலைவருமான சேக்அப்துல்லா பாஜில் ஜமாலி பள்ளிவாசலை திறந்து வைத்தார். மேற்பனைக்காடு, ராஜேந்திரபுரம், தொண்டி, அதிராம்பட்டினம், அறந்தாங்கி, புதுவயல், காசிம்புதுப்பேட்டை, ஆலங்குடி, பேராவூரணி, கறம்பக்காடு ஆகிய பகுதிகளை சேர்ந்த இஸ்லாமியர்கள், கல்லூரியின் முன்னாள் முதல்வர் ராவுத்தர்நைனாமுகமது, மற்றும் கல்லு£ரி மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். கல்லூரியின் அஜரத் முகமது நசீர்ஹூசைன் துவா ஓதினார். அல்அமான் ஆசிரியர் பயிற்சி பள்ளி முதல்வர் முகமது அனிபா நன்றி கூறினார்.
சென்னை மகளிர் அரபிக் கல்லூரி முதல் வரும், சுன்னத் வல் ஜமாத் பேரவை தலைவருமான சேக்அப்துல்லா பாஜில் ஜமாலி பள்ளிவாசலை திறந்து வைத்தார். மேற்பனைக்காடு, ராஜேந்திரபுரம், தொண்டி, அதிராம்பட்டினம், அறந்தாங்கி, புதுவயல், காசிம்புதுப்பேட்டை, ஆலங்குடி, பேராவூரணி, கறம்பக்காடு ஆகிய பகுதிகளை சேர்ந்த இஸ்லாமியர்கள், கல்லூரியின் முன்னாள் முதல்வர் ராவுத்தர்நைனாமுகமது, மற்றும் கல்லு£ரி மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். கல்லூரியின் அஜரத் முகமது நசீர்ஹூசைன் துவா ஓதினார். அல்அமான் ஆசிரியர் பயிற்சி பள்ளி முதல்வர் முகமது அனிபா நன்றி கூறினார்.
Subscribe to:
Posts (Atom)