Tuesday, October 25, 2011

ஓட்டு எண்ணிக்கையில் மாவட்ட நிர்வாகம் கோட்டை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் இருகட்ட உள்ளாட்சித் தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடித்த மாவட்ட நிர்வாகம் ஓட்டு எண்ணிக்கையில் கோட்டை விட்டதால் முடிவுகள் வெளியிடுவதில் காலதாமதம் ஏற்பட்டது.புதுக்கோட்டை மாவட்டத்தில் இருகட்ட உள்ளாட்சி தேர்தல் வன்முறைகள், அசம்பாவிதங்கள் எதுவும் இன்றி அமைதியாக நடந்துமுடிந்தது. தேர்தலில் பதிவான ஓட்டுகள் அந்தந்த பகுதிகளில் உள்ள கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் நடந்தது.ஓட்டு எண்ணிக்கையின் போது கடைபிடிக்கவேண்டிய நடைமுறை குறித்து இதற்காக தேர்வு செய்யப்பட்ட அலுவலர்களுக்கு ஏற்கனவே பயிற்சிகள் வழங்கப்பட்டது. இதுபோன்று ஓட்டு எண்ணிக்கை சரியாக எட்டு மணிக்கு துவங்க வேண்டும் என்றும், முதலில் தபால் ஓட்டுகளை எண்ணி முடித்து முடிவுகளை அறிவித்த பின்னரே மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் மற்றும் ஓட்டுச் சீட்டுகளில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட வேண்டும் உள்ளிட்ட அறிவுரைகளும் அவர்களுக்கு வழங்கப்பட்டது.இருந்தும் ஓட்டு எண்ணிக்கையின் போது நடைமுறைகள் சரியாக பின்பற்ற படாததால் பல இடங்களில் ஓட்டு எண்ணிக்கையை நிறுத்தி வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதன்காரணமாக அப்பகுதிகளில் தேர்தல் முடிவுகள் வெளியிடுவதிலும் காலதாமதம் ஏற்பட்டது.புதுக்கோட்டை பஞ்சாயத்து யூனியன் பகுதிகளில் நடந்த மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர், பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலர், பஞ்சாயத்து தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் நேற்றுமுன்தினம் நடந்தது.இதற்காக ஓட்டு எண்ணிக்கை அலுவலர்களும் காலை ஏழு மணிக்கே அவரவர் இருக்கைகளில் அமர்ந்தனர். எட்டு மணிக்கு தபால் ஓட்டுகள் எண்ணப்படும் என வேட்பாளர்கள், அவர்களது முகவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனா ல், டிபன் சாப்பிட்டு முடித்த பின்னர் தான் ஓட்டுகள் எண்ணவேண்டும் என்பதில் அலுவலர்கள் குறியாக இருந்தனர்.இதன்காரணமாக தபால் ஓட்டு எண்ணும் பணி ஒன்றரை மணிநேர காலதாமதத்துக்கு பின் 9.30 மணிக்கு துவங்கியது. இ வை எண்ணி முடிவுகள் அறிவி க்க பகல் 1.30 மணி ஆனது. இத ன்பின்னர் மதிய சாப்பாடுக்கு ஒருமணி நேரம் எடுத்துக்கொ ண்டதால் ஓட்டு எண்ணிக்கை பிற்பகல் 2.30 மணிக்கு பின்னரே துவங்கியது. பொறுமையிழந்த வேட்பாளர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் அலுவலர்களின் மெத்தனப் போக்கை கண்டித்து குரல் எழுப்பத் துவங்கினர். இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் புகார் தெரிவிக்க அவர்கள் மேற்கொண்ட முயற்சியும் பலனளிக்கவில்லை.
கலெக்டரின் குறிப்பிட்ட மொபைல் ஃபோனை (94441 81000) தொடர்புகொண்டபோது பிஷி, நோ ஆன்ஸர் என்ற பதி÷ ல கிடைத்தது. வெறுத்துபோன வேட்பாளர்கள் மற்றும் கட்சியினர் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக ஓட்டு எண்ணிக்கை ø மயம் அருகே பட்டாசுகளை மெ õத்தமாக வெடிக்கச் செய்தனர்.இதன் புகை ஓட்டு எண்ணிக்கை மையத்துக்குள் புகுந்ததால் பரபரப்பும், பதட்டமும் நிலவியது. இதையடுத்து கல்லூரி முன் பட்டாசுகள் வெடிக்க போலீஸார் தடைவிதித்தனர்.நிலைமையை உணர்ந்துகொண்ட அலுவலர்கள் ஓட்டு எண்ணிக்கையில் வேகத்தை காட்டத் துவங்கினர். இருந்தும் நேற்று அதிகாலை தான் ஓட்டு எண்ணிக்கை முடிவடைந்தது. இதுபோன்ற நிலைமை தான் மாவட்டம் முழுவதும் உள்ள ஊரகப்பகுதி ஓட்டு எண்ணிக் கை மையங்களில் நிலவியது

Tuesday, October 11, 2011

அறந்தாங்கி நகரசபை தலைவர் பதவி காங். கட்சியில் கடும் போட்டி; அதிருப்தி வேட்பாளர் மனு தாக்கல்


அறந்தாங்கி நகராட்சி தலைவர் தேர்தலில் காங்கிரஸ் கட்சியில் கடும் போட்டி நிலவுகிறது.   நடைபெறவுள்ள அறந்தாங்கி நகராட்சி தலைவர் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் கட்சியில் வாய்ப்பு கேட்டு திருநாவுக்கரசர் ஆதரவாளர் ஒருவரும், நகர காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஒருவரும் முயற்சி செய்தனர். இருவருமே தங்களுக்குத்தான் வாய்ப்பு வேண்டும் என போராடியதால் டெல்லியினருக்கு வந்த காங்கிரஸ் மேலிட பார்வையாளரால் கூட சமரசம் ஏற்படுத்த முடியவில்லை.
 
இந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியால் பிஸ்மில்லா பேகம் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். பிஸ்மில்லா பேகம் பாரம்பரியமான தி.மு.க. குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றும், தி.மு.க.வில் போட்டியிட வாய்ப்புக்கேட்டு அங்கு சீட் கிடைக்காததால் திருநாவுக்கரசு ஆதராவாளர்களின் துணையோடு காங்கிரசில் சீட் பெற்றுள்ளார் என்றும் தெரிய வருகிறது.
 
பாரம்பரியமான காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்தவரும், நகர காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் ஆதரவினைப் பெற்ற வரும், உயர்நீதி மன்ற வழக்கறிஞருமான ஜலீலா பேகம் என்பவருக்கு சீட் மறுக் கப்பட்டதால் ஆத்திரமடைந்த காங்கிரஸ் தொண்டர்கள் ஊர்வலமாகச் சென்று போட்டி வேட்பாளராக ஜலீலா பேகம் என்பவரை வேட்பு மனு தாக்கல் செய்ய வைத்தனர். 27 வார்டுகளைக் கொண்ட அறந்தாங்கி நகராட்சியில் திருநாவுக்கரசு ஆதரவாளர்கள் 5 பேரும், நகர காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் 22 பேரும் கவுன்சிலர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
 
நகர காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் போட்டியிடும் 22 கவுன்சிலர் வேட்பாளர்களும் போட்டி வேட்பாளர் ஜலீலா பேகம் என்பவரை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர். காங்கிரசின் போட்டி வேட்பாளர் ஜலீலா பேகம் தனது ஆதரவாளர்களுடன் நகரின் முக்கிய பிரமுகர் களைச் சந்தித்து தனக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.
 
கணிசமான முஸ்லீம்களின் வாக்கு வங்கியைக் கொண்ட அறந்தாங்கியில் முஸ்லீம் சமூகத்திலேயே இருவர் போட்டியிடுவது திராவிட கட்சிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. முஸ்லீம்களின் வாக்கு வங்கி என்பது பெரும்பாலும் தி.மு.க.வுக்கு ஆதரவான வாக்குகளாகும். முஸ்லீம் சமூகத்திலேயே இரண்டு வேட்பாளர்கள் போட்டியிடுவது தி.மு.க.வின் வாக்குகளைக் குறைக்கும் எனத் தெரிகிறது.
 
1971 முதல் அறந்தாங்கி நகராட்சியை தனது கைவசம் வைத்துள்ள திமுக இத்தேர்தலில் நக ராட்சி தலைவர் பதவியை கைப்பற்றுவது கேள்விக் குறிதான் என நகர வாக்கா ளர்கள் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது.
நன்றி மாலை மலர் 

அறந்தை தேர்தலில் பின்னடைவு கா வேட்பாளர்களை எதிர்த்து களத்தில் போட்டி வேட்பாளர்கள்

புதுக்கோட்டை: அறந்தாங்கி நகராட்சியில் காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளர்களை எதிர்த்து போட்டி வேட்பாளர்கள் சுயேச்சையாக போட்டியிடுவதால் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.புதுக்கோட்டை மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி மத்திய அமைச்சர்கள் சிதம்பரம் அணி, வாஸன் அணி, மாநிலத் தலைவர் தங்கபாலு அணி, முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர் அணி மற்றும் இளங்கோவன் அணி என ஐந்து அணிகளாக செயல்பட்டு வருகிறது.இதன்காரணமாக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்வதில் இறுதிகட்டம் வரை இழுபறி நிலை நீடித்தது. இதன்காரணமாக விருப்பமனு கொடுத்த காங்கிரஸ் கட்சியினர் பலர் சுயேச்சையாக போட்டியிட முடிவுசெய்து வேட்புமனு தாக்கல் செய்தனர்.வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளன்று மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வாய்ப்பு கிடைக்காத பலர் சுயேச்சையாக தாக்கல் செய்த வேட்புமனுவை வாப்பஸ் பெற மறுத்து போட்டியிடுகின்றனர்.குறிப்பாக, அறந்தாங்கி நகராட்சி தலைவர் பதவிக்கு ஏற்கனவே ஜெலீலா பேகம் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்தார். மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் ஆதரவாளரான இவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்குமாறு கட்சி மேலிடத்திடம் அறந்தாங்கி நகர காங்கிரஸ் கட்சியினர் பரிந்துரை செய்திருந்தனர்.இந்நிலையில், திருநாவுக்கரசர் ஆதரவாளரான பிஸ்மில்லா பேகம் காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இவருக்கு கை சின்னம் வழங்கப்பட்டுள்ளது.வாய்ப்பை எதிர்பார்த்து ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செய்த ஜெலீலா பேகம் மனுவை வாபஸ் பெறவேண்டும் என மாவட்ட காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியது. இதை ஏற்க மறுத்த ஜெலீலா பேகம், காங்கிரஸ் கட்சியின் போட்டி வேட்பாளராக "புத்தகம்' சின்னத்தில் ஓட்டு சேகரித்து வருகிறார். இவருக்கு சிதம்பரத்தின் ஆதரவாளர்கள் பக்கபலமாக உள்ளனர்.இதுபோன்று கவுன்சிலர் பதவிக்கும் போட்டி வேட்பாளர்கள் பலர் களத்தில் உள்ளதால் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.அறந்தாங்கி நகராட்சியை பொறுத்தமட்டில் தலைவர் பதவிக்கு ஆறு பேரும், மொத்தமுள்ள 27 வார்டு கவுன்சிலர் பதவிக்கு 144 பேரும் போட்டியிடுகின்றனர்.