நாட்டின் முதலாவது கல்வி அமைச்சரான அபுல் கலாம் ஆசாத் பிறந்த நாளை, தேசிய கல்வி நாள் விழாவாகக் கொண்டாட, பள்ளிகளுக்கு மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கடந்த 11ம் தேதி அவரது பிறந்த நாள் விழா பள்ளிகளில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அனைத்து அரசு, நிதியுதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கும் மத்திய அரசிடம் இருந்து அனுப்பப்பட்டு உள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
பள்ளி மாணவ, மாணவிகளை ஆசிரியர்கள் எதற்காகவும் அடிக்கவோ, திட்டவோ கூடாது. அவர்களின் மனம் நோகும்படி நடந்து கொள்ளக் கூடாது. மாணவர்களின் மனம் அறிந்து, அவர்களுக்குப் புரியும்படி பாடம் நடத்த வேண்டும்.
வினாத்தாள் எளிமையாக இருக்க வேண்டும். எந்த ஒரு மாணவனையும் திட்டமிட்டு தேர்வில் தோல்வி அடையச் செய்யக் கூடாது.
மாணவர்களை சாதி, மத, பொருளாதார அடிப்படையில் பாகுபடுத்தக் கூடாது. மாணவர் சேர்க்கைக்கு வரும் குழந்தைகளை எந்தக் காரணம் கொண்டும் நிராகரிக்கக் கூடாது. பள்ளியில் இருந்து நீக்கவும் கூடாது.
இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பள்ளி மாணவ, மாணவிகளை ஆசிரியர்கள் எதற்காகவும் அடிக்கவோ, திட்டவோ கூடாது. அவர்களின் மனம் நோகும்படி நடந்து கொள்ளக் கூடாது. மாணவர்களின் மனம் அறிந்து, அவர்களுக்குப் புரியும்படி பாடம் நடத்த வேண்டும்.
வினாத்தாள் எளிமையாக இருக்க வேண்டும். எந்த ஒரு மாணவனையும் திட்டமிட்டு தேர்வில் தோல்வி அடையச் செய்யக் கூடாது.
மாணவர்களை சாதி, மத, பொருளாதார அடிப்படையில் பாகுபடுத்தக் கூடாது. மாணவர் சேர்க்கைக்கு வரும் குழந்தைகளை எந்தக் காரணம் கொண்டும் நிராகரிக்கக் கூடாது. பள்ளியில் இருந்து நீக்கவும் கூடாது.
இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment