புதுக்கோட்டை: புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழக அரசின் இலவச அரிசி வழங்கும் திட்டத்தின் கீழ் அனைத்து ரேஷன் கடைகளிலும் தரமான புழுங்கல் அரிசி வழங்கப்பட்டது.
முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசின் முதல் திட்டமான இலவச ரேஷன் அரிசி வழங்கும் திட்டம் நேற்று தமிழகம் முழுவதும் துவக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 18 அர்பன் ஸ்டோர் உட்பட 935 ரேஷன் கடைகள் மூலம் தரமான புழுங்கல் அரிசி இலவசமாக வழங்கப்பட்டது. இதை மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். இத்திட்டத்தின் மூலம் நான்கு லட்சத்து 2,666 ரேஷன் கார்டுதாரர்கள் பயனடைய உள்ளனர். நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர் இலவச அரிசி வாங்கியுள்ளனர்.
ரேஷன் கார்டுகள் எண்ணிக்கையின் அடிப்படையில் ஒவ்வொரு ரேஷன் கடையிலும் தேவையான அரிசி இருப்பு வைக்கப்பட்டு விடுமுறை நாட்களை தவிர மாதம் முழுவதும் இலவச ரேஷன் அரிசி வழங்க அரசு உத்தரவிட்டுள்ளதால் நேற்று ரேஷன் கடைகள் முன் அரிசி வாங்க நெருக்கடி எதுவும் தென்படவில்லை. இதற்கிடையே இலவச அரிசி வழங்கும் திட்டத்தை கண்காணிக்கவும், ஆய்வு செய்யவும் அமைக்கப்பட்டுள்ள மண்டல அலுவலர்கள் தலைமையிலான கண்காணிப்புக் குழுவினர் நேற்றுமுன்தினம் முதல் ஒவ்வொரு ரேஷன் கடைகளுக்கும் சென்று இருப்பு வைக்கப்பட்டுள்ள அரிசியை ஆய்வு செய்தனர். தரம் குறைந்த அரிசி மூடை அப்புறப்படுத்தப்பட்டு தரமான அரிசி மூடை வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை டவுன் தெட்சிணாமூர்த்தி மார்கெட் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் இலவச அரிசி வழங்கும் திட்டத்தை எம்.எல்.ஏ., முத்துக்குமரன் துவக்கி வைத்தார். ஒருசில கடைகளை தவிர மீதமுள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் இலவச அரிசி வழங்கும் திட்டத்தை விற்பனையாளர்களே துவக்கி வைத்தனர்.
முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசின் முதல் திட்டமான இலவச ரேஷன் அரிசி வழங்கும் திட்டம் நேற்று தமிழகம் முழுவதும் துவக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 18 அர்பன் ஸ்டோர் உட்பட 935 ரேஷன் கடைகள் மூலம் தரமான புழுங்கல் அரிசி இலவசமாக வழங்கப்பட்டது. இதை மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். இத்திட்டத்தின் மூலம் நான்கு லட்சத்து 2,666 ரேஷன் கார்டுதாரர்கள் பயனடைய உள்ளனர். நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர் இலவச அரிசி வாங்கியுள்ளனர்.
ரேஷன் கார்டுகள் எண்ணிக்கையின் அடிப்படையில் ஒவ்வொரு ரேஷன் கடையிலும் தேவையான அரிசி இருப்பு வைக்கப்பட்டு விடுமுறை நாட்களை தவிர மாதம் முழுவதும் இலவச ரேஷன் அரிசி வழங்க அரசு உத்தரவிட்டுள்ளதால் நேற்று ரேஷன் கடைகள் முன் அரிசி வாங்க நெருக்கடி எதுவும் தென்படவில்லை. இதற்கிடையே இலவச அரிசி வழங்கும் திட்டத்தை கண்காணிக்கவும், ஆய்வு செய்யவும் அமைக்கப்பட்டுள்ள மண்டல அலுவலர்கள் தலைமையிலான கண்காணிப்புக் குழுவினர் நேற்றுமுன்தினம் முதல் ஒவ்வொரு ரேஷன் கடைகளுக்கும் சென்று இருப்பு வைக்கப்பட்டுள்ள அரிசியை ஆய்வு செய்தனர். தரம் குறைந்த அரிசி மூடை அப்புறப்படுத்தப்பட்டு தரமான அரிசி மூடை வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை டவுன் தெட்சிணாமூர்த்தி மார்கெட் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் இலவச அரிசி வழங்கும் திட்டத்தை எம்.எல்.ஏ., முத்துக்குமரன் துவக்கி வைத்தார். ஒருசில கடைகளை தவிர மீதமுள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் இலவச அரிசி வழங்கும் திட்டத்தை விற்பனையாளர்களே துவக்கி வைத்தனர்.
No comments:
Post a Comment